நாகப்பட்டினம், நவ.16 - நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் ஊராட்சியைச் சேர்ந்த தியாகி பக்கிரி சாமி நினைவு தினம் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் ஊராட்சி பனைமேடு பகுதியைச் சேர்ந்த வர் பக்கிரிசாமி. இளம் வயதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து, உழைக்கும் மக்களுக்கு எதிராக பண்ணையார்கள் நடத்திய கொடுமைகளுக்கு முடிவு கட்ட, போராட் டக் களம் கண்டவர். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் நிலப் பிரபுகளின் அட்டூழியங்களை ஒழிப்பதற்கு செங்கொடி இயக்கத்துடன் இணைந்து பல போராட்டங்களை நடத்தியவர். பி.எஸ்.தனுஷ்கோடி, ஜி.வீரையன் உள்ளிட்ட பல்வேறு செங்கொடி இயக்கத் தலைவர்களுடன் இணைந்து நாகை ஒன்றிய பகுதியில் நிலவி வந்த பண்ணையடிமை தனத்தை ஒழிப்ப தற்கு அரும்பாடுபட்டார். இந்நிலையில் நிலப்பிரபுக்கள் ஒன்றுகூடி 1968 நவம்பர் 16 அன்று சிக்கல் பக்கிரிசாமியை படு கொலை செய்தனர். அவருடைய 57 ஆவது நினைவு தினமான சனிக்கிழமை சிக்கல் பனைமேட்டில் செங்கொடி ஏற்றி வீரவணக்கம் செலுத்தப்பட்டது. பின்னர் சிக்கல் கடைத்தெருவில் நாகை வடக்கு ஒன்றியச் செயலாளர் வி.வி.ராஜா தலைமையில் அஞ்சலி பொதுக் கூட்டம் நடைபெற்றது. சிபிஎம் நாகை மாவட்டச் செயலாளர் வி.மாரி முத்து, மாநிலக் குழு உறுப்பினரும், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினரு மான நாகை மாலி, மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் எம்.முருகையன், ப.சுபாஷ் சந்திர போஸ், மாவட்டக் குழு உறுப்பினர்கள், ஒன்றியச் செயலா ளர்கள் மற்றும் தியாகி சிக்கல் பக்கிரி சாமி குடும்பத்தினர் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.