districts

img

தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து மாராத்தான்

நாமக்கல், ஜன.19- குமாரபாளையத்தில் தலைக்கவசம் அணிவது அவசியம் குறித்த விழிப்புணர்வு மாராத்தான் போட்டி நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் திருவள்ளுவர் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில், தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு மாராத்தான் ஓட்டப்போட்டி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நற்பணி மன்ற தலைவர் முத்துக்குமார் தலைமை வகித்தார். திமுக நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளர் மதுரா.செந்தில் கொடியசைத்து போட்டியை துவக்கி வைத்தார். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்றனர். திருவள்ளுவர் நகரில் துவங்கி, ஓலப்பாளையம், கம்பன் நகர், பெரியார் நகர், சடையம்பாளையம், உள்ளிட்ட பல பகுதிகள் வழியாக 6 கிலோ மீட்டர் தூரம் இந்த போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் வெற்றி பெற்ற ஆண் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக முதல் பரிசாக ரூ.7 ஆயிரத்து 500, இரண்டாம் பரிசாக ரூ.2 ஆயிரத்து 500, மூன்றாம் பரிசாக ரூ.ஆயிரத்து 500 வழங்கப்பட்டது. இதில் நகர்மன்றத் தலைவர் விஜய்கண்ணன், திமுக மாநில செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், ஒன்றியச் செயலாளர் நாச்சிமுத்து, எஸ்எஸ்எம் லட்சுமியம்மாள் மெட்ரிக் பள்ளி தாளாளர் ரவீந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.