districts

img

பெண் காவலர்களுக்கான மாரத்தான்

கோவை, மார்ச் 7- உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஆயுதப்படை பெண் காவலர்களுக்கான மாரத்தான் போட்டி நடை பெற்றது. மார்ச் 8 மகளிர் தினம் உலகம் முழுவதும் கொண் டாடப்பட்டு வருகிறது. இதனை ஊக்குவிக்கும் வகை யில் கோவை மாநகர ஆயுதப்படையில் பணியாற்றி வரும் பெண் காவலர்களுக்கான மரத்தான் ஓட்டம் வியா ழனன்று நடைபெற்றது. இந்த மாரத்தான் ஓட்டத்தை கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலக தலை மையிட துணை ஆணையாளர் சுகாசினி துவங்கி வைத்தார். மரத்தான் ஓட்டத்தில் ஏராளமான ஆயுதப் படை பெண் காவலர்கள் கலந்து கொண்டு ஓடினர்.  இந்த மாரத்தான் ஓட்டம் கோவை மாநகர ஆயுதப் படை கவாத்து மைதானத்தில் துவங்கி டாக்டர் பால சுந்தரம் ரோடு, அவிநாசி ரோடு, ரேஸ்கோர்ஸ் ஆகிய பகுதிகளுக்கு சென்று மீண்டும் கோவை மாநகர ஆயுதப் படை கவாத்து மைதானத்தில் நிறைவு பெற்றது. இந்த மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற  பெண் காவலர்களுக்கு காவல் ஆணையர் வெ.பால கிருஷ்ணன் பரிசுகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாந கரத் துணை ஆணையாளர் சரவணன், ஆயுதப் படை உதவி ஆணையாளர் சேகர், ஆய்வாளர், பிரதாப் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் வெற்றி பெற்ற பெண் காவலர்கள் ட்ரம்ஸ் இசைக்கு உற்சகமாக நடனமாடினர்.