districts

img

மணிப்பூர் கலவரம்: பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கம் கண்டனம்

ஈரோடு, ஜுலை 11- மணிப்பூர் மாநில கலவரங்களைத் தடுக்க தவறிய பாஜக ஒன்றிய, மாநில அரசுகளுக்கு அகில இந்திய பிஎஸ் என்எல் ஓய்வூதியர் சங்கம் கண்டனங் களைத் தெரிவித்துள்ளது. அகில இந்திய பிஎஸ்என்எல் டிஓடி  ஓய்வூதியர் சங்க மாநில செயற்குழு கூட் டம் ஈரோட்டில் செவ்வாயன்று நடை பெற்றது. தேசிய கொடியை ஏற்றி வைத்து மாநில தலைவர் சி.கே.நரசிம் மன் கூட்டத்திற்கு தலைமை ஏற்றார். சங்க கொடியினை ஏற்றி வைத்த ஆலோ சகர் வி.ஏ.என்.நம்பூதிரி தொடக்க உரை யாற்றினார். மாவட்ட செயலாளர் சின்ன சாமி வரவேற்றார். நிதி மற்றும் செயல் பாட்டு அறிக்கை முன்மொழியப்பட்டது.  இதில், பிஎஸ்என்எல் ஓய்வூதியர் கள் அனைவருக்கும்  1.1.2017 முதல் பென்சன் மாற்றம், ஓய்வூதிய மாற்றம்  நடைமுறைகளை வேண்டும் என்றே  அதிகாரிகள் கால தாமதம் செய்வதை கைவிட வேண்டும். ஒன்றிய அரசு கொண்டு வர திட்டமிட்டு உள்ள  பொது  சிவில் சட்டத்தை மக்களை பிளவுபடுத் தும் என்பதால் அந்த திட்டத்தை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுபடுத்த வேண்டும். மணிப் பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் கல வரங்களை தடுக்க தவறிய மாநில பாஜக அரசையும், ஒன்றிய அரசையும் இச் செயற்குழு வன்மையாகக் கண்டிக் கிறது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இறுதியாக எஸ்.நட ராஜா நன்றி கூறினார்.