தாராபுரம், ஜூலை 15- தாராபுரம் அருகே உள்ள ஆச்சியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் சரவணன் தலைமையில் ஆச்சி யூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கூட்டத்தில் மேலாண்மை குழு மறுகட்டமைப்பு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து துரையம்மாள் தலைவராகவும், ராக்கேல் துணைத்தலைவராகவும் பெற்றோர்களின் ஒப்புதலுடன் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இக்கூட்டத்தில் 2021-22 கல்வி ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றதற் காகத் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களைப் பெற் றோர் ஆசிரியர் கழகத்தினர் பாராட்டி பரிசுகள் வழங்கி னர். மேலும் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மதியழகன், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் செந்தில் குமார், பேரூராட்சி வார்டு கவுன்சிலர் தனலட்சுமி, விமல் உட்பட ஏராள மானோர் கலந்து கொண்டனர். இறுதியாகப் பள்ளி ஆசிரியர் பால்ராஜ் நன்றி தெரிவித்தார்.