தருமபுரி, மார்ச் 11- ஊர்புற நூலகர்களை பணி நிரந்த ரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு பொது நூலகத்துறை அலுவலர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு பொது நூலகத்துறை அலுவலர் சங்க 5 ஆவது மாவட்ட பொதுக்குழு கூட்டம் தரும புரி முத்து இல்லத்தில் மாவட்ட தலைவர் மு.முனிராஜ் தலைமை யில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் எம்.சுருளிநாதன் துவக்க உரையாற்றி னார். மாவட்ட செயலாளர் பெ.பிரபா கரன், மாவட்ட பொருளாளர் எஸ்.சர வணகுமார் ஆகியோர் அறிக்கையை சமர்பித்தனர். இதில், மாவட்ட இணை செயலாளர் தீ.சண்முகம், முன்னாள் பொதுச்செயலாளர் சி.சரவணன் அரசு ஊழியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் கோ.பழனியம்மாள், மாவட்ட செயலாளர் ஏ.சேகர், மாவட்ட பொருளாளர் கே.புகழேந்தி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சி.காவேரி உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பிளஸ் 2, சிஎல்ஐ எஸ் தகுதியுடன் 14 ஆண்டுகளாக பணிபுரியும் ஊர்புற நூலகர்களை பணி நிரந்தரம் செய்து, வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண் டும். நூலகர்களை தொழில்நுட்ப பணி யாளர்களாக குறிப்பிட்டுள்ள நிலை யில், தொழில்நுட்ப ஊழியர்களுக் கான ஊதியம் வழங்கப்படாதவர் களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். தொகுப்பூதிய பகுதி நேர நூலகர்கள், தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய முரண்பாடுகளை களைந்து, புதிய ஊதிய நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் தேர்வு இதைத்தொடர்ந்து இக்கூட்டத் தில், சங்கத்தின் புதிய மாவட்ட தலைவ ராக மு.முனிராஜ், மாவட்ட செய லாளராக தீ.சண்முகம், மாவட்ட பொரு ளாளராக எஸ்.சரவணகுமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.