கோபி, ஆக. 27- குண்டேரிப்பள்ளம் அணையின் நுழைவு வாயில் பூட்டப்பட்டுள்ளதால், சுற்றுலாப் பய ணிகள் ஏமாற்றமடைந்தனர். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளை யம் அடுத்த டி.என்.பாளையம் வனசரகத் திற்குட்பட்ட பகுதியில் குண்டேரிப்பள்ளம் அணை அமைந்துள்ளது. இந்த அணை 42அடி உயரம் கொண்டது. அணையில் மூலம் வலது மற்றும் இடது கரை வாய்க்கால் மூலம் 2500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இதுதவிர 10 க்கும் மேற் பட்ட கிராமங்களுக்கு முக்கிய குடிநீர் ஆதார மாக விளங்கி வருகிறது. சில மாதங்களுக்கு முன் அணையின் நீர்மட்டம் 30 அடிக்கு குறைந்து காணப்பட்டது. தற்போது மழை யால் அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டு 41 அடியை எட்டியது. கடல்போல் காட்சி அளிக் கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்ற னர். இந்நிலையில், குண்டேரிப்பள்ளம் அணையின் மேற்புற நுழைவாயிலை காரண மின்றி, முறையாக அறிவிப்பு செய்யாமல் வருட கணக்கில் பூட்டி வைக்கப்பட்டுள்ள னர். சுற்றுலாப் பயணிகள் பூட்டப்பட்டுள்ள நுழைவாயில் கதவில் சிரம்பட்டு உள்ளே நுழைய முடியாமல், நுழைந்தும். சிலர் கத வில் நுழைய முடியாதவர்கள், வனபகுதி யில் புதர்களை கடந்து ஆபத்தாக செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், அணையில் கட்டப்பட்டுள்ள சிறு வர் பூங்கா, சுற்றுலாப் பயணிகள் அமர்ந்து ஓய்வெடுக்கும் ஓய்வுகூடத்திற்கு செல்வதற் கும் நுழைவாயில் கதவுக்கு பூட்டு போடப்பட் டுள்ளதால். சுற்றுலாப் பணிகள் ஏமாற்றத்து டன் திரும்பி செல்கின்றனர். சுற்றுலாப் பயணி களை அனுமதிக்க வேண்டும் என அரசுக் கும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும் சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள் ளனர்.