districts

img

மஞ்சப்பையை பயன்படுத்துவோம் - தலைமுறையை காப்போம்

திருப்பூர், மார்ச் 13- திருப்பூர் சிக்கண்ணா அரசு  கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சார்பாக சுப்பராயன் ்புதூர் கிராம பகுதிகளில் நெகிலி பைகளை தவிர்க்க வேண்டும், மஞ் சப்பையை பயன்படுத்தி தலைமு றையை காப்போம் என்ற விழிப்பு ணர்வினை வீடு வீடாக சென்று மேற் கொண்டனர்.  நாட்டு நலப்பணித் திட்டம் அலகு -2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் தலைமையில் மாண வர்கள் பிளாஸ்டிக் பைகளால் ஏற் படும் விளைவுகளை கிராம மக்க ளுக்கு எடுத்துக் கூறினர். அதிக எடையுள்ள செல்போனை மறக்கா மல் எடுத்துச் செல்லும் நாம், எடையே இல்லாத துணிப் பையை  எடுத்துச் செல்ல தயக்கம் காட்டுவது எதனால் என்ற கேள்வியை எழுப்பி,  பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற் படும் நோய்களை பற்றி கூறினர்.  குறிப்பாக, பிளாஸ்டிக் மனித  இனத்திற்கு மட்டுமல்ல, அவற்றால் மண்ணின் தரம் கெட்டுப் போகும், கால்நடைகள் அவற்றை உட்கொள் ளுவதால் அவையும் உயிரிழக்க நேரிடுகிறது. ஆகையால் அனைத்து உயிரினத்தையும், நம் சுற்றுப்புறத்தையும் காப்பதற்கு ஒரு வழி பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று விழிப் புணர்வு ஏற்படுத்தினர். இந்த நிகழ் வுக்கான ஏற்பாட்டினை கல்லூரி  முதல்வர் கிருஷ்ணன் செய்திருந் தார்.