திருப்பூர், மார்ச் 16 – திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே ஊதியூர் பகுதி யில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டி ருக்கும் நிலையில், அந்த சிறுத்தையைப் பிடிப்பதற்கு வனத்து றையினர் கூண்டு வைத்து முயற்சித்து வருகின்றனர். இப்ப ணியை மாநில செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தார். ஊதியூர் பகுதியில் கடந்த சில தினங்களாக ஆடு, மாட்டு கன்றுகுட்டி உள்ளிட்ட மூன்றுக்கும் மேற்பட்ட கால்நடை களை சிறுத்தை தாக்கி கொன்றுள்ளது. அப்பகுதியில் உள்ள விளைநிலப் பகுதியில் சிறுத்தையின் காலடித் தடமும் பதி வாகி இருந்தது. அத்துடன் மயானத்தின் சுவற்றில் சிறுத்தை படுத்திருந்ததைப் பார்த்ததாகவும் அப்பகுதி பெண் ஒருவர் தெரிவித்தார். இதையடுத்து ஊதியூர் கோயில் சுற்றுவட்டாரப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் குறித்து எச்சரிக்கை பதாகை களை வனத்துறையினர் வைத்துள்ளனர். அத்துடன் கூண்டு வைத்து சிறுத்தையைப் பிடிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ள னர். இந்நிலையில் வியாழக்கிழமை மாநில செய்தித்துறை அமைச்சரான, மு.பெ.சாமிநாதன், தனது சொந்த தொகுதி யில் சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் மேற்கொண் டிருக்கும் நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சிறுத்தை நடமாட்டம் குறித்து ஊதியூர் பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் கூறுகையில், அருகாமையில் உள்ள சுற்றுவட்டார கிராமப்புறப் பகுதிக்குள் சிறுத்தை இருப்பதாக தெரிவித்தனர். ஊதியூர் அருகில் வனப்பகுதி எதுவும் இல்லாத நிலை யில், இங்கு சிறுத்தை வந்திருப்பது எப்படி என்ற கேள்வி எழுகிறது. உடுமலை, அமராவதி வனப்பகுதியில் இருந்து சிறுத்தை வந்திருக்கக்கூடும் என்று வன உயிரின ஆர்வலர் கள் தெரிவித்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதே போல் சிறுத்தை ஒன்று வனத்தில் இருந்து இப்பகுதிக்கு அரு கில் வந்ததாகவும் இப்பகுதிவாசிகள் தெரிவித்தனர். அப் போது, ஊதியூருக்கும், குண்டடத்திற்கும் இடையே உயர் மின் அழுத்த டிரான்ஸ்பார்மரில் ஏறிய சிறுத்தை, மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாகவும் தெரிவித் தனர். சிறுத்தையை விரைந்து பிடித்து, இப்பகுதி கால்நடைகள் இழப்பை தவிர்ப்பதன் மூலம் விவசாயிகளுக்கு ஏற்படும் பொருளாதார இழப்பைத் தடுத்து, மக்களின் அச்சத்தையும் போக்க வேண்டும் என்று கிராமவாசிகள் கூறினர்.