districts

img

உடுமலை சிறையில் சட்ட விழிப்புணர்வு முகாம்

உடுமலை, மார்ச் 17- உடுமலை வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் பள்ளி, கல் லூரி, தொழில் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் சட்ட விழிப்பு ணர்வு முகாம்கள் மற்றும் பொது இடங்களில் விழிப்புணர்வு  பேரணி குறிப்பிட்ட இடைவெளியில் நடத்தப்பட்டு வருகி றது. இதன்படி வியாழனன்று உடுமலை கிளைச் சிறையில்  உள்ள சிறைவாசிகளுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம் நடை பெற்றது.   இந்த விழிப்புணர்வு முகாம் உடுமலை வட்ட சட்டப் பணி கள் குழுவின் தலைவரும், சார்பு நீதிபதியுமான எம்.மணிகண் டன் தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில், மாவட்ட உரி மையியல் நீதிபதி பாலமுருகன் மற்றும் விஜயகுமார், மீனாட்சி  ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் சிறைவாசி களுக்கு அடிப்படை உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றியும்,  வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய நல்லொழுக்கங்கள் பற்றிய அறிவுரைகள்  மற்றும்  விழிப்புணர்வும் வழங்கப்பட் டது. இதில் குற்றவியல் பயிற்சி வட்டாட்சியர் ரேவதி, வழக்க றிஞர் மகாலட்சுமி, கிளைச் சிறை கண்காணிப்பாளர் பாலச்சந் திரன் உள்ளிட்ட சிறைத்துறை ஊழியர்கள் கலந்து கொண்ட னர்.