ஈரோடு, செப்.15- மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா வின் 116 ஆவது பிறந்த நாள் விழா மாநிலம் முழுவதும் ஞாயி றன்று கொண்டாடப்பட்டது. மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா- வின் 116 ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு ஞாயி றன்று, மாநிலம் முழுவதும் அரசியல் கட்சிகள் உட்பட பல் வேறு தரப்பினரும், அவரது திருவுருவச் சிலைக்கு மாரி யாதை செலுத்தினர். அதன்ஒருபகுதியாக ஈரோடு, பன்னீர் செல்வம் பார்கில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ வெண்கல சிலைக்கு திமுக சார்பில் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ் தலைமையிலும், அதிமுக சார் பில் முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் தலைமையி லும் அந்தந்த கட்சியினர் மாலை அணிவித்து மலர்தூவி மரி யாதை செலுத்தினார். இதைபோன்று கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில், திமுக நகரச் செயலாளர் முகமது யூனுஸ், தெற்கு நகரச் செயலாளர் முனுசாமி, நகர்மன்றத் தலைவர் மெஹரிபா பர்வீன், துணைத்தலைவர் அருள்வடிவு, தலைமை செயற் குழு உறுப்பினர்கள் டி.ஆர்.சண்முகசுந்தரம் அஷ்ரப் அலி, பா.அருண்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.