தருமபுரி, மே 1- உழைப்பாளர் தினத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற் சங்கத்தின் சார்பில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் ஞாயிறன்று நடை பெற்றது. நான்கு தொழிலாளர் சட்ட தொகுப்பு களை திரும்பப்பெற வேண்டும். விவ சாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதி களை நிறைவேற்ற வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், வேலை நாட்களை அதிகப்படுத்தி, நகர்புறங்களுக்கு விரிவுபடுத்த வேண்டும். படித்த இளை ஞர்களுக்கு தகுதிக்கேற்ப வேலை வழங்க வேண்டும். எரிபொருட்களின் மீதான வரியை ரத்து செய்ய வேண் டும். உடல் உழைப்பு தொழிலாளர் களுக்கு சமூக பாதுகாப்பை உறுதி படுத்த வேண்டும். பொதுத்துறை நிறு வனங்களை தனியாருக்கு விற்பதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் மே தினத்தில் தொழிற்சங் கத்தின் சார்பில் பேரணி மற்றும் பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதன்ஒருபகுதியாக தருமபுரி பெரியார் சிலை முன்பு துவங்கிய பேர ணியை ஏஐடியுசி மாவட்ட தலைவர் எம்.மாதேஸ்வரன் துவக்கி வைத்தார். இப்பேரணி கடைவீதி, எஸ்.வி.ரோடு, பிஎஸ்என்எல் அலுவலகம் வழியாக செங்கொடிபுரத்தை வந்தடைந்தது. இதையடுத்து நடைபெற்ற பொதுக் கூட்டத்திற்கு சிஐடியு மாவட்ட தலை வர் பி.ஜீவா தலைமை வகித்தார். இதில், சிஐடியு மாநில துணைத்தலை வர் இ.பொன்முடி, மாவட்ட செயலா ளர் சி.நாகராசன், மாவட்ட பொருளா ளர் ஏ.தெய்வானை, ஏஐடியுசி மாநிலச் செயலாளர் ஆர்.ஆறுமுகம், மாவட்ட செயலாளர் கே.மணி, மாவட்ட பொரு ளாளர் ஏ.முருகன் உட்பட திரளான உழைக்கும் வர்க்கத்தினர் கலந்து கொண்டனர்.
ஈரோடு
ஈரோடு அரசு தலைமை மருத்துவ மனை அருகே தொடங்கிய பேர ணிக்கு, ஏஐடியுசி சுமைதூக்கும் தொழி லாளர் சங்க தலைவர் எஸ்.டி.பிரபா கரன் தலைமை வகித்தார். இதில், தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம், ஏஐடியுசி மாவட்ட செயலாளர் பி.எல்.சிவரா மன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஏ.எம்.முனுசாமி, வங்கி ஊழியர் சங்க மாவட்ட செய லாளர் எஸ்.சூரியநாராயணன், சிஐ டியு மாவட்ட தலைவர் எஸ்.சுப்ரமணி யன், மாவட்ட பொருளாளர் மாரப்பன், விவசாய தொழிலாளார் சங்க மாவட்ட செயலாளர் சண்முகவள்ளி உள்ளிட்ட திரளான தொழிலாளர்கள் மேள தாளங் களுடன் கலந்து கொண்டனர்.
உதகை
உதகை காபி ஹவுஸ் பகுதியிலி ருந்து துவங்கிய பேரணியானது, மெயின் பஜார் வழியாக சென்று ேபருந்து நிலையத்தில் நிறைவடைந் தது. இதில், சிஐடியு மாவட்ட செயலா ளர் ரமேஷ், துணைச்செயலாளர் நவீன் சந்திரன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநி லக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சங்கர லிங்கம், ஏஐடியுசி நிர்வாகிகள் சையது இப்ராஹிம், நசீர், மூர்த்தி உட்பட திரளா னோர் கலந்து கொண்டனர்.
திருப்பூர்
சிஐடியு திருப்பூர் மாவட்ட அலுவல கம் முன்பிருந்து சிஐடியு தொடங்கிய பேரணியும், பி.என்.ரோடு ஏஐடியூசி அலுவலகம் முன்பிருந்து ஏஐடியூசி பேரணியும் தொடங்கியது. இப்பேர ணிகளானது ரயில்வே மேம்பாலம், குமரன் சாலை, மாநகராட்சி சாலை வழியாக அரிசி கடை வீதி பெருமாள் கோயில் அருகில் முடிவடைந்தது. இதில், திரளான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். பேரணிக்கு முன்பாக இளைஞர்கள் கலந்து கொண்ட செந்தொண்டர் அணிவகுப் பும், இரு சக்கர, நான்கு சக்கர வாகன ஊர்வலமும் நடைபெற்றது.சிஐடியு திருப்பூர் மாவட்ட அலுவல கம் முன்பிருந்து சிஐடியு தொடங்கிய பேரணியும், பி.என்.ரோடு ஏஐடியூசி அலுவலகம் முன்பிருந்து ஏஐடியூசி பேரணியும் தொடங்கியது. இப்பேர ணிகளானது ரயில்வே மேம்பாலம், குமரன் சாலை, மாநகராட்சி சாலை வழியாக அரிசி கடை வீதி பெருமாள் கோயில் அருகில் முடிவடைந்தது. இதில், திரளான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். பேரணிக்கு முன்பாக இளைஞர்கள் கலந்து கொண்ட செந்தொண்டர் அணிவகுப் பும், இரு சக்கர, நான்கு சக்கர வாகன ஊர்வலமும் நடைபெற்றது.
சேலம்
சேலம் காந்தி ரோடு பகுதியில் இருந்து சிஐடியு மாவட்ட தலைவர் பி.பன்னீர்செல்வம் தலைமையில் பேரணி துவங்கியது. சேலம் அரசு இருபாலர் கல்லூரி அம்பேத்கர் சிலை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வழி யாக கோட்டை மைதானத்தில் பேரணி நிறைவு பெற்றது. இதையடுத்து ஏஐடி யூசி மாவட்ட தலைவர் வி.முருகன் தலைமையில் மே தின பொதுக்கூட்டம் கொட்டும் மழையிலும் நடைபெற்றது. இதில், சிஐடியு மாநில துணை பொதுச் செயலாளர் எஸ்.கண்ணன், மாவட்ட செயலாளர் டி.உதயகுமார், ஏஐடியுசி திருப்பூர் எம்.ரவி, ஐஎன்டியுசி மாவட்ட செயலாளர் எம்.முனுசாமி உட்பட திர ளானோர் கலந்து கொண்டனர்.