கோவை, ஏப்.27- தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக அர சின் அறிவிப்பை வரவேற்று, கோவையில் திமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். தமிழக முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலை வருமான மறைந்த கலைஞர் மு.கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3 ஆம் தேதி இனி அரசு விழாவாக கொண்டாடப் படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் பேரவை விதி எண்: 110ன் கீழ் முதல்வர் ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பை தமிழகம் முழுவதிலும் உள்ள திமுக தொண்டர்கள் வரவேற்று கொண்டாடி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக கோவை விமான நிலைய ஆலோசனைக்குழு உறுப்பினரும், திமுக நிர்வாகியுமான ராஜேந்திரன் விமான நிலைய வளாகத்தில் பொதுமக்களுக்கு இந்த அறிவிப்பு தொடர்பான விவரத்தை கூறி இனிப்புகளை வழங்கி கொண்டாடினார். இந்த நிகழ்ச்சியின் போது திமுக நிர்வாகிகளான நீலகிரி இளங்கோ, உதகை ராஜ், செந்தில், இஞ்சினிய அய்யாசாமி உள்ளிட்ட பலர் உடனி ருந்தனர். இதேபோல், கோவை குறிச்சி வடக்கு பகுதி திமுக பொறுப்பாளர் எஸ்.ஏ.காதர் தலைமையில் போத்தனூரை அடுத்த சுந்தராபுரம் பகுதியில் கோவை தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி ரங்கநாதன் பொதுமக்களுக்கு இனிப்பு கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில், மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர்கள், வார்டு பொறுப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.