தருமபுரி, மார்ச் 13- அடிப்படை வசதியில்லாத தால் கம்மம்பட்டி ஊராட்சி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வரு கின்றனர். தருமபுரி மாவட்டம், நல்லம் பள்ளி வட்டத்திலுள்ள கம்மம்பட்டி ஊராட்சியானது மாவட்டத்தின் கடைசி எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த கம்மம் பட்டி ஊராட்சிக்கு தருமபுரி மாவட் டத்திலிருந்து இதுநாள் வரை நேரடி சாலை போக்குவரத்து இல்லை. தருமபுரி மாவட்டம், தொப்பூர் பகுதியில் இருந்து மேட் டூர் செல்லும் சாலையில் சேலம் மாவட்டம் கைகாட்டி வெள்ளார் பகுதிக்கு சென்று அங்கிருந்து தான் கம்மம்பட்டிக்கு செல்ல முடி யும். போக்குவரத்து வசதிகளும் இவ்வாறு இருக்க அந்த ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள கிராமப் பகுதிகளில் அடிப்படை வசதிகள் கூட கிடைக்காமல் மிகவும் சிரமப் பட்டு வருகின்றனர். இப்பகுதி மக்கள் அதிகளவில் ஆடு, மாடு மேய்த்தல் மற்றும் விவசாயம் உள்ளிட்டவையே பிரதான தொழி லாக மேற்கொண்டு வருகின்ற னர். கம்மம்பட்டி ஊராட்சியில் கஸ் தூரி கோம்பை, கோம்பை காட்டுவ ளவு, மழையூர் காடு உள்ளிட்ட பகு திகளுக்கு மத்திய, மாநில அரசு கள் அறிவிக்கும் எந்த ஒரு திட்ட மும் கடந்த 10 ஆண்டாக அப்பகுதி மக்களை சென்றடையவில்லை.
இதனால் அடிப்படை வசதிக ளான குடிநீர், தார் சாலை, மின் விளக்குகள் ஆகியவற்றிற்குகூட ஏங்கிக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, பேருந்து வசதி சேலம் மாவட்டத் தையே சார்ந்து இருக்க வேண்டிய தாக உள்ளது. கஸ்தூரி கோம்பை மற்றும் காட்டுவளவு பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பல ஆண் டுகளாக அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் கால்நடைக ளுக்கு குடிநீர் தேவைக்காக ஆழ் துளை கிணறு அல்லது மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் மனிதர்கள் முதல் கால்ந டைகள் வரை அனைவருக்கும் குடிநீர் தேவைக்காக டிராக்டர்கள் மற்றும் வாகனங்கள் மூலம் பணம் கொடுத்து தண்ணீரை வாங்கி பயன்படுத்தும் நிலையில் உள்ளனர். கோடை காலங்கள் துவங்குவதற்கு முன்பே இந்த நிலை என்றால் வரும் மாதங்களில் என்னவாகும் என்று தெரிய வில்லை என கவலைப்படுகின்ற னர். மேலும், மத்திய அரசு அறிவித் துள்ள ஜல் ஜீவன் திட்டம் மூலம் அனைவருக்கும் குடிநீர் மற்றும் தனிநபர் கழிப்பறை உள்ளிட்ட திட்டங்கள் இதுவரை ஒருவருக்கு கூட வழங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கின்றனர்.
மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களுக்கு விண் ணப்பங்களை பலமுறை துறை சார்ந்த அலுவலகங்களில் கொடுத் தும் பயனில்லை. நாங்கள் மாவட்ட எல்லைப் பகுதியில் அமைந்துள் ளதால் இதுவரை எந்த ஒரு திட்ட மும் முறையாக வந்து சேர வில்லை. எங்களுடைய இன்னல் களை கண்டுகொள்வதும் இல்லை என்றும் குற்றம் சாட்டுகின் றனர். தங்கள் பகுதி மிகவும் கரடு முரடாக காணப்படுவதால் மருத் துவ தேவை, பிரசவத்திற்காக ஆம் புலன்ஸ் வாகனங்கள் மற்றும் ஆட் டோக்கள் கூட வருவதில்லை. அதையும் மீறி அவசர உதவிக் காக அருகில் உள்ள கைகட்டி பகு தியில் உள்ள அரசு மருத்துவ மனைக்கு சென்றால் நீங்கள் தரும புரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆகையால் தொப்பூர் அல்லது தருமபுரி அரசு மருத்துவம னைக்கு செல்லுங்கள் என்று மருத் துவமனைகளிலும் அலைகழிக் கப்படுவதாக தெரிவித்தனர். மலையூர் காடு, செங்காங்காடு, கஸ்தூரி கோம்பை, உள்ளிட்ட பகு தியில் இருந்து தொப்பூர் அரசு மருத்துவமனை 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. நேரடி பேருந்து வசதியும் இல்லாததால் அரசு மருத்துவமனைக்கு உடன டியாக செல்ல முடியாத சூழல் உள் ளது. மேலும் தற்போது இருக்கும் சூழ்நிலையில் குடிநீர் தேவையை உடனடியாக பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். சாலை வசதி மற்றும் மத்திய அரசின் திட்டமான தனிநபர் கழிப்பறை உள்ளிட்ட திட் டங்களையும் அப்பகுதி மக்க ளுக்கு கிடைக்க மாவட்ட நிர்வா கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.