கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயராக பொறுப்பேற்றுள்ள கல்பனா ஆனந்தகுமாரை, திங்களன்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இதில், மாதர் சங்க மாவட்ட செயலாளர் ஏ.ராதிகா, பொருளாளர் ஜோதிமணி, மாநிலக்குழு உறுப்பினர்கள் ராஜலட்சுமி, சுதா மற்றும் 28 ஆவது வார்டு சிபிஎம் மாமன்ற உறுப்பினர் கண்ணகி ஜோதிபாசு ஆகியோர் உடனிருந்தனர்.