districts

ஜான் சல்லிவனின் 235 ஆவது பிறந்தநாள் விழா

உதகை, ஜூன் 16- நீலகிரி மாவட்ட முதல் ஆட்சியர் ஜான் சல்லிவனின் 235 ஆவது பிறந்த நாள் விழா மாவட்ட நிர்வாகம் சார்பில் கொண்டாடப்பட்டது. நீலகிரி மாவட்டத்தின் முதல் ஆட்சி யரும், ஊட்டி நகரை நிர்மாணித்தவரு மான ஜான் சல்லிவனின் 235 ஆவது பிறந்தநாள் விழா, கோத்தகிரி அருகே  கன்னேரிமுக்கு பகுதியில் உள்ள அவ ரது நினைவகத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் கொண்டாடப்பட்டது. அங்கு  குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் பூஷணகுமார், ஜான் சல்லிவனின் உரு வச்சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதன் பின் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதற்கிடையே ஊட்டி உருவாகி 200 ஆண்டுகள் ஆனதை யொட்டி, பல்வேறு விழாக்கள் நடத்தப் பட்டு வருகிறது. இதற்கு ரூ.10 கோடி நிதியை தமிழ்நாடு அரசு ஒதுக்கியது. ஆனால், ஊட்டி உருவாக காரணமான ஜான் சல்லிவனின் நினைவகம் மற் றும் பூங்காவை மேம்படுத்த நிதி ஒதுக் கப்படவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் போது மான நிதியை ஒதுக்கி நினைவகம் மற் றும் பூங்காவை மேம்படுத்தி விரை வில் பயன்பாட்டிற்கு கொண்டு வர  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.