கோவை. ஏப். 9–
கோவை போத்தனூர் அருகே பெண்ணிடம் 4 பவுன் செயின் பறித்த வாலி பரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
கோவை போத்தனூர் அருகே உள்ள அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி காளியம்மாள் (47). இவர் வியாழனன்று இரவு வேலைக்கு சென்றுவிட்டு பொள்ளாச்சி சாலையில் உள்ள காந்தி நகர் வழியாக வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த அடையா ளம் தெரியாத இரண்டு நபர் கள் காளியம்மாளை பின் தொடர்ந்து, அவர் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க செயினை பறித்துச் சென்ற னர். இதுகுறித்து காளியம் மாள் போலீசில் புகார் அளித் தார். இதையடுத்து வழக்குப்ப திவு செய்து பெண்ணிடம் தங்கச் செயினை பறித்துச் சென்ற வாலிபர்களை காவல் துறையினர் தேடி வருகின்ற னர்.