தருமபுரி ஜூலை -31, தருமபுரி மாவட்டத்தில், ஆணவப் படுகொலை செய்யப்பட்ட இளைஞ ரின் குடும்பத்துக்கு அரசு வேலை ரூ.10 இலட்சம் இழப்பீடு வழங்க வேண் டும் என ஜவாஹிருல்லா வலியுறுத்தி யுள்ளார். தருமபுரியில் கடந்த சில தினங்க ளுக்கு முன் தனியார் ஓட்டலில் பணிபு ரிந்த முகமத் ஆஷிக் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்ப வம் குறித்து தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி ஆகி யோரை சந்தித்து இச்சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண் டனை வழங்குமாறு ஜவாஹிருல்லா வலியுறுத்தினார். இதனைத்தொடர்ந்து அவர் செய்தி யாளர்களிடம் கூறுகையில், தருமபு ரியை சேர்ந்த இளைஞர் முகமது ஆஷிப் ஒரு பெண்ணை காதலித்தார். அந்த பெண் செல்வச் செழிப்பானவர். இவர் ஏழை என்ற ஒரே காரணத்திற் காக சாதி மதம் கடந்து இவர் வேலை செய்யும் தனியார் உணவகத்தில் வைத்து ஆணவப்படுகொலை செய் துள்ளனர். இந்த ஆணவப்படுகொலை செய்யப்பட்ட இந்த வழக்கில் தனி நீதிமன்றத்தில் விரைந்து விசாரணை செய்து குற்றவாளிகளுக்கு உச்சபட்ச கடும் தண்டனை வழங்கவேண்டும்.முக மது ஆஷிப்குடும்பத்துக்கு ரூ 10 இலட் சம் இழப்பீடு வழங்கவேண்டும். குடும்ப வருமானத்துக்கு ஆதாரமாக உள்ள இளைஞரின் இறப்பால் குடும்பம் நிலை குலைந்துள்ளது. எனவே, இளைஞ ரின் சகோதரருக்கு அரசு வேலை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். பேட்டியின் போது தமுமுக மாநிலச் செயலாளர் அல் தாப் அஹமத், தலைமை பிரதிநிதி சாதிக் பாஷா, மாவட்டத் தலைவர் சுபேதார், மாவட்டச் செயலாளர் அப்துல்சுக்கூர் மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் இலியாஸ், மாவட்டப் பொரு ளாளர் இதயத்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.