districts

img

ஜல்லிக்கட்டு போட்டி: ஆட்சியர் ஆலோசனை

நாமக்கல், ஜன.6- ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பான ஆலோ சனை கூட்டம் நாமக்கல் ஆட்சியர் தலைமை யில் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவது தொடர்பான ஆலோ சனைக்கூட்டம் ஆட்சியர் அலுவலக கூட்ட ரங்கில், ஆட்சியர் ச.உமா தலைமையில் நடை பெற்றது. இக்கூட்டத்தில் ஆட்சியர் ச.உமா பேசுகையில், உச்சநீதிமன்ற அறிவுரைப்படி, ஐல்லிக்கட்டு போட்டி ஒவ்வொரு ஆண்டும்  அனுமதி வழங்கப்பட்ட இடங்களை தவிர வேறு இடங்களில் ஜல்லிகட்டு போட்டிகள் நடத்த அனுமதி இல்லை. ஜல்லிகட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளின்  பாதுகாப்பு மற்றும் நலனை உறுதிபடுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் அனைத்துத் துறை அலுவலர்கள் உள்ளடக்கிய குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு துறைவாரியாக அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண் டும். ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற் கும் மாடுபிடி வீரர்கள் 18 வயதிற்கு மேல்  இருக்க வேண்டும். அரசினால் தெரிவிக்கப் பட்டுள்ள அனைத்து அறிவுரைகளையும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துபவர்களும், சம்மந்தப்பட்ட அரசுத்துறை அலுவலர்க ளும் தவறாமல் பின்பற்ற வேண்டும், என் றார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவ லர் ரெ.சுமன், வருவாய் கோட்டாட்சியர் மா. க.சரவணன், சே.சுகந்தி, கால்நடை பராம ரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் எம். நடராஜன் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.