புன்செய் புளியம்பட்டி நகராட்சி தலைவரை கண்டுகொள்ளாமல், அவரை புறக்கணிப்பு செய்து விட்டு துணைத்தலைவரின் கண் அசை விலேயே பணிகள் நடைபெறுவதா கவும், நகர் மன்ற தலைவர் தலித் வகுப்பை சேர்ந்தவர் என்பதால் சாதிய ஆதிக்கத்தோடு நகராட்சி நிர்வாகம் நடந்து கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஈரோடு மாவட்டம், புன்செய் புளி யம்பட்டி நகராட்சியில் 18 வார்டு கள் உள்ளன. இதில், திமுகவின் நகர துணை செயலாளர் ஜனார்த் தனன், நகர் மன்ற தலைவராகவும், திமுகவின் நகர செயலாளர் சிதம்ப ரம் நகர மன்ற துணை தலைவராக வும் தேர்வு செய்யப்பட்டனர். 15 வார்டுகளில் திமுகவினரும், 2 வார்டுகளில் காங்கிரஸ், ஒரு வார் டில் அதிமுகவினரும் உள்ளனர். இந்த 18 பேரில் 4 பேர் பட்டியலி னத்தவர்கள். இதில் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த நகர்மன்ற தலை வர் ஜனார்த்னன் உள்ளார். இந்நிலையில், நகர மன்ற நிர்வா கத்தில் துணை தலைவராக உள்ள சிதம்பரத்தின் ஆதிக்கமே நிலவு வதாகவும், இவர் ஆதிக்கசாதியை சேர்ந்தவர் என்பதால், தலைவரை சிறிதும் மதிக்காத நிலையே உள்ள தாகவும், வெறும் கையெழுத்தை பெறும் இயந்திரம் போல நகர் மன்ற தலைவரை பயன்படுத்துவ தாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன்வெளிப்பாடே, நகராட்சி அலு வலகத்தில் அழுக்கடைந்த கதவில், தலைவர் என்று மட்டுமே எழுதப்பட் டுள்ளது. தலைவர் அறையில் அவர் பெயர் கூட இடம் பெறவில்லை என் பது அப்பட்டமாக தெரிகிறது. மேலும், புன்செய் புளியம்பட்டி சந்தையில், அருந்ததிய மக்களின் வாழ்வாதாரமான மாட்டிறைச்சிக் கடைகளை தரை மட்டமாக்கி,
அகற் றப்பட்ட நிலையில், கடந்த நான்கு மாத காலமாக மார்க்சிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி தொடர்ந்து போராட்டத்தை முன் னெடுத்து வந்தது. பின்னர், கால வரையற்ற குடியேறும் போராட் டத்தை நடத்தினர். பாதிக்கப்பட்ட வர்கள் அருந்ததிய மக்கள். நகர் மன்ற தலைவராக உள்ளவரும் அருந்ததிய வகுப்பை சேர்ந்த வர், இருந்தபோதிலும், அவரால் ஏதும் செய்ய இயலாத நிலையி லேயே உள்ளார் என கூறப்படு கிறது. பல கட்ட பேச்சுவார்த்தை, நகராட்சி ஆணையர் துவங்கி, அமைச்சர் வரை பேச்சுவார்த்தை நடத்தியபோதும், நகராட்சி மன்ற தலைவர் ஜனார்த்னன் பங்கேற்க அனுமதிக்கவில்லை என சொல்லப் படுகிறது. அதிகாரத்தில் அமர்ந்த போதும், ஆணையிட அதிகாரம் இல்லாமல், இதுவும் கடந்து போகும் என்கிற மென்மைத் தன் மையோடு கடந்து சென்றதாக சொல்லப்படுகிறது. அதிகாரம் இல்லாத ஆட்டு தாடி கூட, ஆடாத ஆட்டமெல்லாம் ஆடு கிறபோது, அதிகாரத்தின் மையத் தில் அமர்ந்தும், எதுவும் செய்ய இயலாத நிலையில் ஆதிக்கசாதி யினரின் வசத்தில் புளியம்பட்டி நக ராட்சி நிர்வாகம் சிக்கியிருப்பதை உணர முடிகிறது. இது எந்த வகை “மாடல்” என்பதை ஆட்சியாளர்கள் தான் தெரிவிக்க வேண்டும் என சமூக செயற்பட்டாளர்கள் விமர் சனத்தை முன்வைக்கின்றனர். (ந.நி)