கோவை, சுல்தான்பேட்டை பகுதியில் நடைபெற்ற வாலிபர் சங்கத்தின் போதைக்கு எதிராக ஒரு கோடி பேரிடம் கையெழுத்து பெறும் இயக்கத்தை, மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் துவக்கி வைத்தார். இதில், வாலிபர் சங்க முன்னாள் மாநிலத் தலைவர் செ.முத்துக்கண்ணன், நிர்வாகிகள் ரவிதாஸ், தோழர் பாலதண்டாயுதம், பாடகர் துரையரசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.