திருப்பூர், ஜன. 5 - ஒன்றிய பாரதிய ஜனதா அரசு இந்தியை திணிக்க முற்பட்டு வரும் வேளையில், தமிழ் மொழியை மத்திய தொடர்பு மொழியாக கொண்டு வர தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் அவைத் தலைவர் சு.துரைசாமி கூறினார். திருப்பூர் -ஊத்துக்குளி சாலையில் உள்ள எம்.எல்.எஃப். தொழிற்சங்க அலுவலகத்தில் புதனன்று செய்தியாளர்களுக்கு சு.துரைசாமி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது: ஒன்றிய அரசு இந்தியை திணிக்க முற்பட்டு வருகிறது. வரும் ஜன. 9 ஆம் தேதி கூடவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழை மத்திய தொடர்பு மொழியாக கொண்டு வருவதற்கான தீர்மானத்தை நிறை வேற்ற வேண்டும். மாநில மொழிகளை ஆட்சி மொழி யாக கொண்டுவர அந்தந்த மாநிலங்கள் தீர்மானம் கொண்டுவர வேண்டும். பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடை பெறும் குஜராத், மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் எல்லாம், பாரதிய ஜனதா ஆட்சியாளர்கள் ஆங்கில மொழியினை கட்டாய பாடமாக்கி கொண்டு, தமிழகத்தில் இந்தியை திணிக்க முயற்சிக்கின்றனர். இதேபோல் இந்தி பேசாத ஒவ்வொரு மாநிலங்களும், மாநில மொழியை தொடர்பு மொழியாக அறிவிக்க தீர்மானம் நிறைவேற்ற முன்வர வேண்டும். அந்தந்த மாநில மொழியை மத்திய தொடர்பு மொழியாக அறிவிக்க ஒன்றிய அரசு ஒப்புக் கொள்ளாமல் நிராகரித்தால் மக்கள் பாஜகவை தோற்கடிப்பார்கள். ஆங்கிலம் உலக மொழியாக உள்ளது. ஆங்கிலம் இணைப்பு மொழி யாக இருப்பதன் மூலம் தமிழர்கள் வெளிநாடுகளில் தங்கள் ஆளுமையை செலுத்த முடிவதாகவும் தெரிவித்தார். மதிமுகவின் வாரிசு அரசியல் குறித்த கேள்விக்கு மாற்றங்கள் தவிர்க்க முடியாதது எனவும், மதிமுகவின் எதிர்காலம் அதன் நடவடிக்கைகளை பொறுத்து அமையும் எனவும் தெரிவித்தார்.