உள்ளாட்சிகளில் பெண்களுக்கு ஐம்பது சதவீத அதிகாரம் என்கிற உன்னத நோக்கத்தை சீர்குலைக்கும் வகையில், உள்ளாட்சி மன்றங்களில் தேர்ந் தெடுக்கப்பட்ட பெண் உறுப்பினர்களை சுயமாக செயல்படவிடாமல் ஆண் உறவி னர்கள் அதிகாரங்களில் தலையீடு செய்வதை தடுக்க வேண்டும். மேலும், மன்ற கூட்டங்களில் உறவினர்கள் பங்கேற்க கூடாது என உத்தரவிட வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.