districts

img

இலவம் மரங்களில் பஞ்சு பறிக்கும் பணிகள் தீவிரம்

மேட்டுப்பாளையம், ஜூன் 1- மேட்டுப்பாளையத்தில் உள்ள கல்லார் அரசு பழப் பண்ணையில் சீசன் துவங்கியுள்ளதால், இலவம் மரங் களில் இருந்து காய்களை தட்டி பஞ்சு சேகரிக்கும் பணி தீவிர மாக நடைபெற்று வருகிறது. இயற்கை எழில் மிகுந்த நீலகிரி மலையடிவார பகுதியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த கல்லார் அரசு தோட்டக் கலை பழப்பண்ணை அமைந்துள்ளது. ஆண்டு முழுவதும் சீரான காலநிலை நிலவும் இப்பண்ணையில் துரியன், மங் குஸ்தான், வெண்ணைப்பழம், ரம்புட்டான், வாட்டர் ஆப்பிள் என மிக அரிதாக விளையக்கூடிய பழவகை மரங்கள் உள்ளன. மேலும், இங்கு 300க்கும் மேற்பட்ட ‘சில்க் காட்டன் ட்ரீ’ என்று அழைக்கப்படும் இலவம் மரங்களும் உள்ளது. தற் போது இலவம் பஞ்சு சீசன் துவங்கியுள்ளதால், உயர்ந்து வளரும் தன்மையுடைய இம்மரங்களில் உள்ள காய்கள் வெடித்து அதனுள் இருக்கும் இலவம் பஞ்சு வெளிவர துவங்கியுள்ளது. இதனையடுத்து மரங்களில் உள்ள பஞ்சு காய்களை தட்டி பறிக்கும் பணிகளும் உதிர்ந்து விழும்  பஞ்சுகளை சேகரிக்கும் பணிகளும் தீவிரமாக நடை பெற்று வருகிறது. மழைக்காலம் துவங்கிவிட்டால் நீரில் நனைந்து பஞ்சு வீணாகிவிடும் என்பதால் தற்போது பஞ்சுகளை எடுத்து அவற்றை பாதுகாப்பாக மூட்டை கட்டி வைக்கும் பணி முழு  வேகத்தில் நடைபெறுகிறது. இப்பஞ்சுகள் மெத்தை தலை யணை மற்றும் மருத்துவ துறைக்கான தையல் நூல் தயா ரிக்கவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், இதன் விதைகளில் இருந்து எண்ணெய் எடுக்கப்பட்டு சோப்பு  தயாரிக்கவும், இதன் கழிவில் இருந்து கிடைக்கும் புண் ணாக்கு கால்நடைகளுக்கு உணவாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.