districts

தண்டவாளத்தை சீரமைக்கும் பணி: அதிகாரிகள் ஆய்வு

கோவை, ஆக.4- கிணத்துக்கடவு ரயில்வே தண்ட வாளத்தை சீரமைக்கும் பணிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். திண்டுக்கல்லிலிருந்து பொள்ளாச்சி வழியாக போத்தனூர் வரை மீட்டர் கேஜ்  ரயில் பாதை இருந்தது. இது அகல ரயில்  பாதையாக மாற்றப்பட்டு, மின்மயமாக் கப்பட்டது. இந்த வழித்தடத்தில் கோவையிலிருந்து பொள்ளாச்சி, பழனி, மதுரை செல்லும் ரயில்கள் இயக்கப்படு கிறது. மேலும், சிறப்பு ரயில்களும் இயக் கப்படுகிறது. இங்கு அனைத்து ரயில் களும் 80 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படுகிறது. ஆனால், வேகத்தை அதிகரித்து கூடுதல் ரயில்களை இயக்க பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர். இதையேற்று வேகத்தை அதிகரிக்க தண்டவாளத்தின் உறுதித்தன்மையை ரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்து  வருகின்றனர். இந்நிலையில், கிணத்துக் கடவு ரயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தை சீரமைக்கும் பணி பிரத் யேக எந்திரம் மூலம் நடைபெற்றது. தண்டவாளத்தின் கீழ் பகுதியில் தேங்கி யிருந்த மண்ணை அகற்றி ஜல்லிக் கற்கள் போடப்பட்டது. இந்த பணிகளை பாலக்காடு ரயில்வே கோட்டப் பொறியா ளர் பிரிவு அலுவலர் சுதீந்திரன் ஆய்வு  செய்தார். இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ரயில்களின் வேகத்தை அதிகரிக்க தண்டவாளங்களை தீவிர மாக ஆய்வு செய்து, தேவையான இடங் களில் சீரமைப்பு பணியை மேற்கொண்டு வருகிறோம். இப்பணி தற்போது பொள் ளாச்சியில் இருந்து கிணத்துக்கடவு வரை 22 கிலோ மீட்டர் தூரத்திற்கு நிறை வடையும் தருவாயில் உள்ளது. இப் பணிகள் முடிவடைந்ததும் இந்த வழித் தடத்தில் ரயில்களை 100 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்க வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு வழியாக கூடுதல் ரயில்களும் இயக்கப் படலாம். இது தொடர்பாக முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும், என் றனர்.