districts

img

காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தல்

தருமபுரி, அக்.12- காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என சத்துணவு ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் தருமபுரி ஒன்றிய பேரவை கூட்டம் அரசு ஊழியர் சங்க தருமபுரி அலுவலகத் தில் நடைபெற்றது. ஒன்றியத் தலைவர் எம்.ஜெயந்தி தலைமை வகித்தார். என்.நூராணி வரவேற்றார். மாவட்டப் பொருளாளர் பி.வளர்மதி துவக்கி வைத்து பேசினார். ஒன்றியச் செயலா ளர் எஸ்.ரீனா, பொருளாளர் பி.மாதம்மாள் ஆகியோர் அறிக் கைகளை முன்வைத்தனர். இக்கூட்டத்தில், முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை, சத்துணவு மைய ஊழியர்களிடம் ஒப்படைக்க வேண்டும். சத்துணவு ஊழியர்களை முழு நேர  அரசு ஊழியராக்கி, வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வுபெறும் சத்துணவு அமைப்பாளர்க ளுக்கு ரூ.5 லட்சமும், சமையலர் மற்றும் சமையல் உதவியா ளர்களுக்கு ரூ.3 லட்சம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து சங்கத்தின் தருமபுரி ஒன்றியத் தலை வராக எம்.ஜெயந்தி, செயலாளராக எஸ்.ரீனா, பொருளாள ராக பி.மாதம்மாள் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். முடி வில், மாநிலச் செயலாளர் பி.மகேஸ்வரி நிறைவுரையாற்றி னார். இதில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சி.காவேரி, துணைத் தலைவர் ராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர். அம்பிகா  நன்றி கூறினார்.