சென்னை, ஆக.30- பராமரிப்பு இல்லாத மாநகராட்சி கழிப்பிடத்தை பயன்படுத்த சென்ற இளைஞர் பலியானதை யொட்டி அவரது குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய சென்னை மாவட்டக்குழு கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து மாநக ராட்சி ஆணையர் ஜெ.ராதா கிருஷ்ணனிடம் அளிக்கப் பட்ட மனுவில், சென்னை வட்டம், சிந்தாதரிப்பேட்டை, அருணாச்சலம் தெருவில் வசித்து வந்த மணிகண்டன் (வயது 28), ஆக 18 (வெள்ளிக்கிழமை) இரவு சுமார் 8 மணி அளவில் அதே பகுதியில் உள்ள பொது கழிப்பிடத்தை பயன்படுத்த சென்றுள்ளார். முழுமையாக பராமரிப்பு செய்யாமலும் மின்விளக்கு வசதி இல்லாத காரணத்தி னாலும் மணிகண்டன் வழுக்கி விழுந்ததில் தலை யில் அடிபட்டு, வலிப்பு வந்து நினைவிழந்தார். ஆம்புலன்ஸ் மூலம் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் ஆக.22 அன்று (செவ்வாய்) உயிரி ழந்தார்.
சிந்தாதரிப்பேட்டை பம்பிங் ஸ்டேஷன் பகுதி யில் உள்ள இரண்டு பொதுக் கழிப்பிடங்களை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். உரிய பராமரிப்பு இல்லாத காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளில் அஞ்சலை என்பவர் உயிரிழந்தார். கழிப்பறையை பயன்படுத்த செல்லும் போது ஒன்றுக்கும் மேற்பட்டோர் கால்களில் காயம் ஏற்பட்டு சிரமப்படுவதாகவும் தெரி வித்தனர். எனவே, சிந்தாதரிப் பேட்டை பம்பிங் ஸ்டேஷன் பகுதியில் உள்ள பொதுக் கழிப்பிடங்களை போர்க்கால அடிப்படையில் பராமரிக்க வேண்டும். ரிச்சி தெருவில் ஆயி ரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயன்படுத்தி வரும் பொதுக் கழிப்பறைகளையும் சீரமைக்கவேண்டும். இந்த விபத்தில் உயிரிழந்த மணி கண்டன் தாயார் ஷீலா தேவி ஆதரவற்றுள்ள நிலையில் அவருக்கு உரிய இழப்பீடு வழங்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவேண்டும் என அந்த மனுவில் வலி யுறுத்தப்பட்டுள்ளது. மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா இந்த மனுவை அளித்தார். மணி கண்டன் தாயார் ஷீலா தேவி, கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வே.ஆறுமுகம், சேப்பாக்கம் பகுதி செய லாளர் கவிதா கஜேந்திரன், பகுதிகுழு உறுப்பினர் என்.சுரேஷ்குமார், கிளைச் செய லாளர் எஸ்.குணசீலன் மற்றும் உயிரிழந்த இளை ஞரின் உறவினர்கள் ரவி, சாந்தகுமார், இந்திரா ஆகியோர் அப்போது உடனிருந்தனர்.