districts

ஏற்றுமதியாளர் சங்க புதுப்பிக்கப்பட்ட கட்டிடம் தொழில் துறை அமைச்சர் ராஜா திறந்து வைத்தார்

திருப்பூர், ஜூலை 22 - திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தின் புதுப்பிக்கப்பட்ட அலுவலகக் கட்டிடத்தை மாநில தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெள்ளி யன்று திறந்து வைத்தார். இந்த திறப்பு விழா நிகழ்வுக்கு ஏற் றுமதியாளர் சங்க நிறுவனத் தலை வர் ஏ.சக்திவேல் தலைமை ஏற்றார்.  சங்கத் தலைவர் கே.எம்.சுப்பிரமணி யம் வரவேற்றார். மாநில தமிழ்  வளர்ச்சி, செய்தித்துறை அமைச்சர்  மு.பெ.சாமிநாதன், மாநில ஆதிதிரா விடர் நலத்துறை அமைச்சர் கயல் விழி செல்வராஜ், மேயர் தினேஷ் குமார் ஆகியோர் அலுவலகக் கட்டி டத்தின் பல்வேறு பிரிவுகளைத் திறந்து வைத்து வாழ்த்திப் பேசி னர். கட்டிடத்தைத் திறந்து வைத்து தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா சிறப்புரை ஆற்றுகையில், அமெரிக்க சந்தை மட்டுமின்றி ஐரோப்பிய நாடுகள் சந்தையும் தற் போது பாதிக்கப்பட்டு தள்ளாடி வரு கிறது. திருப்பூர் பின்னலாடை ஏற்று மதி துறையினர் தொழில்நுட்ப ஜவுளி  உற்பத்தியில் கவனம் செலுத்தினால்  மிகப்பெரிய வளர்ச்சி வாய்ப்பு உள் ளது. மருத்துவம், தொழில்நுட்பம், விளையாட்டு உள்ளிட்ட துறைகளுக் குத் தேவையான ஜவுளி உற்பத்தி யில் ஈடுபட வேண்டும். மாநில அரசு  ஜனவரி முதல், இரண்டாவது வாரத் தில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த உள்ளது. இம்மா நாட்டில் பல்வேறு நாடுகளின் அரங்கு கள் அமைக்கப்பட உள்ளன. தொழில்  துறையினர் இதில் பங்கேற்க வேண் டும் என்று கேட்டுக் கொண்டார். செய்தியாளர்களுக்கு பேட்டிய ளிக்கையில், மின் கட்டண உயர்வு  ஒன்றிய அரசின் விதிமுறைப்படியும்,  முந்தைய மாநில அதிமுக அரசு ஒப் புக் கொண்டு கையெழுத்திட்டதா லும் நடைமுறைப்படுத்தப்பட்டு உள் ளது. எனினும் பாதிப்பைக் குறைக் கும் விதத்தில் கட்டணம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது என்றார். முன்னதாக இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் வாழ்த்திப் பேசினார். சங்கத்தின் நிறு வன உறுப்பினர்கள் பிரேம் துரை சாமி, யுவராஜ் சம்பத், மைக்கோ வேலுச்சாமி உள்ளிட்டோர் சிறப்பிக் கப்பட்டனர். ஏற்றுமதியாளர்கள், பின்ன லாடை தொழில் துறையினர், தொழிற் சங்கத்தினர் உள்பட பலர் விழாவில்  கலந்து கொண்டனர்.