districts

img

வங்கியில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பிடுக

சேலம், ஜூலை 14- வங்கிகளில் உள்ள காலிப் பணி யிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி இந்திய  வங்கி ஊழியர் சம்மேளனம் சார்பில்  கோட்டை பகுதியில் உள்ள இந் தியன் வங்கி மண்டல அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய வங்கி ஊழியர் சம் மேளனம் சார்பில் பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி சங்கத்தின்  துணைத் தலைவர் ரகுபதி தலை மையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்து வங்கி களிலும் உள்ள காலிப் பணியி டங்களை நிரப்பிட வேண்டும், தற் காலிக ஊழியர்களை நிரந்தர  படுத்த வேண்டும் என ஆர்ப்பாட் டத்தில் வலியுறுத்தினர். சங்கத்தின் மாநிலத் துணைத்தலைவர் எஸ்.ஏ.  ராஜேந்திரன், மாவட்டச் செய லாளர் எஸ்.தீனதயாளன் ஆகி யோர் கண்டன உரையாற்றினர். இதில் கிராமிய வங்கி, கூட்டுறவு  வங்கி, பொதுத்துறை வங்கிகளை  சார்ந்த எண்ணற்ற ஊழியர்கள் பங் கேற்றனர்.

கோவை

கோவையில், இந்தியன் வங்கி தலைமை அலுவலகம் முன்பு வங்கி ஊழியர் சம்மேளனத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. கோவை மாவட்டத் தலை வர் கணேசன் தலைமை ஏற்றார்.  இதில், வங்கி ஊழியர் சம்மேளனம்   பொதுச்செயலாளர் ஆர்.மகேஸ் வரன்,  மாநிலத் துணைத்தலைவர் என்.சுப்பிரமணியன், மற்றும் எம். ஜெயபாலன், சிவலிங்கம் வெங் கடேஷ், நாகேந்திரன் மற்றும் மங்கள கௌரி, உமா மகேஸ்வரி, கனரா வங்கி ரேணுகா, இளைய பாரதி உள்ளிட்ட திரளானோர் பங் கேற்றனர்.