சேலம், மார்ச் 25- இந்தியா கூட்டணி சார்பில் போட் டியிடும் திமுக, கொமதேக வேட்பா ளர்கள் திங்களன்று வேட்புமனு தாக் கல் செய்தனர். சேலம் மக்களவை தொகுதியில், திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதி போட்டியிடுகி றார். இந்நிலையில், திங்களன்று அவர், திமுக அலுவலகத்தில் இருந்து 100க்கும் மேற்பட்டோர் முன்னிலை யில் பேரணியாக வந்து, சேலம் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத் தும் அதிகாரியுமான ரா.பிருந்தா தேவியை நேரில் சந்தித்து வேட்பு மனுவை தாக்கல் செய்தார். திமுக மத்திய மாவட்டச் செயலாளர் ராஜேந் திரன் எம்எல்ஏ, காங்கிரஸ் மாணவர் மாவட்டத் தலைவர் பாஸ்கரன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் மேவை.சண் முகராஜா, சிபிஐ மாவட்டச் செயலா ளர் ஏ.மோகன், விசிக மாவட்டச் செய லாளர் மொழி அரசு, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் ஆகியோர் கலந்து கொண்டனர். பொள்ளாச்சி பொள்ளாச்சி மக்களவை தொகு தியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கே. ஈஸ்வரசாமி, திங்களன்று பொள் ளாச்சி சிடிசி மேடு பகுதியில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக வந்து பொள்ளாச்சி பேருந்து நிலையம் அருகில் உள்ள மாவட்ட சார் ஆட்சியர் அலுவல கத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் கேத்தரின் சரண்யாவிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இந் நிகழ்வில், திமுக திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலாளர் இல.பத்மநா பன், கோவை வடக்கு மாவட்டச் செய லாளர் தொண்டாமுத்தூர் ரவி, காங்கி ரஸ் கட்சியின் மாவட்டச் செயலாளர் தென்னரசு, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் நித்தியானந்தம் ஆகியோர் உடனிருந்தனர். தருமபுரி தருமபுரி மக்களவை தொகுதி யில், இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர், ஆ. மணி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில், மாவட்ட தேர்தல் நடத்தும் அலு வலர் கி.சாந்தியிடம் வேட்புமனு தாக் கல் செய்தார். அமைச்சர் எம்.ஆர். கே.பன்னீர்செல்வம், திமுக மாவட் டச் செயலாளர்கள் தடங்கம் பெ.சுப்ர மணி, பி.பழனியப்பன், விசிக மாவட் டச் செயலாளர் த.கு.பாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர். ஈரோடு இந்தியா கூட்டணி சார்பில், ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷ் திங்களன்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். அப் போது, இந்தியா கூட்டணி கட்சியின் தலைவர்கள் உடனிருந்தனர். நாமக்கல் திமுக கூட்டணி சார்பாக கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக் கல் நாடாளுமன்ற தொகுதி வேட்பா ளராக போட்டியிடும் அக்கட்சியின் தெற்கு மாவட்டச் செயலாளர் மாதேஸ்வரன் மாவட்ட ஆட்சியர் மற் றும் தேர்தல் நடத்தும் அலுவலரான ச.உமாவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்நிகழ்வில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், சின்ராஜ் எம்.பி., ராஜேஸ்குமார் எம்.பி., திமுக மேற்கு மாவட்டச் செயலாளர் மதுரா செந்தில் உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.