நாமக்கல், மார்ச் 2- பதவியேற்புக்கு வரும்போது, கடத் தப்படும் அபாயம் உள்ளதாக எழுந்த புகா ரால், குமாரபாளையம் நகராட்சி வார்டு களில் வெற்றி பெற்ற சுயேட்சை கவுன் சிலர்கள் போலீஸ் பாதுகாப்புடன் வந்து பதவியேற்றதால் பரபரப்பு நிலவியது. நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இங்கு திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற் போக்கு கூட்டணி 14 இடங்களையும், அதி முக 10 இடங்களையும் பிடித்தது. இதில், திமுக, அதிமுக அதிருப்தி வேட்பாளர்கள் சுயேட்சையாக களமிறங்கி 9 இடங்களில் வெற்றி பெற்றனர். இத்தேர்தலில் திமுக நகரப் பொறுப்பாளர் எம்.செல்வம், அதி முக நகரச் செயலாளர் நாகராஜன் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் தோல்வியடைந்த னர். இந்நிலையில், இங்கு தலைவர், துணைத் தலைவர் பதவியைக் கைப்பற்ற 17 பேரின் ஆதரவு தேவை. திமுக, அதிமுக வுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காமல் இழுபறி ஏற்பட்டுள்ள நிலையில், சுயேட்சை களின் ஆதரவு இல்லாமல் வெற்றி பெற முடி யாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தேர்தலில் வெற்றி பெற்ற நகரமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு விழா புதனன்று நடைபெற்றது.
முன்ன தாக, பதவியேற்க வரும் கவுன்சிலர்கள் கடத்தப்படும் அபாயம் உள்ளதாக, திமுக நகரச் செயலாளரும், 25 ஆவது வார்டு கவுன் சிலருமான வெங்கடேசன் மாவட்ட ஆட்சி யர் மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்திருந்தார். இதைத்தொ டர்ந்து, குமாரபாளையம் நகராட்சி அலுவ லகத்தைச் சுற்றி புதனன்று தடுப்புகள் அமைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாது காப்பு போடப்பட்டது. நகராட்சி ஊழியர்கள் மற்றும் காவல் துறையினரை தவிர வேறு யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து நகராட்சி ஆணை யாளர் சசிகலா தலைமையில் நகர்மன்ற கூட்டரங்கில் பதவியேற்பு விழா தொடங்கி யது. அப்போது, முதலில் திமுக நகர்மன்ற உறுப்பினர்கள் 7 பேர் பதவியேற்றுக் கொண் டனர். அதைத்தொடர்ந்து அதிமுக உறுப் பினர்கள் 4 பேர் தனியே பதவியேற்றுக் கொண் டனர். இதைத்தொடர்ந்து தனி வாகனத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வந்த அதி முக, திமுக மற்றும் சுயேட்சை கவுன்சிலர் கள் உட்பட 18 பேர் பதவியேற்றனர். பதவி யேற்றவுடன் போலீஸ் பாதுகாப்புடன் மீண் டும் தனி வாகனத்தில் புறப்பட்டு சென்ற னர். குமாரபாளையம் நகராட்சி வார்டுகளில் 9 பேர் வெற்றி பெற்றதால், திமுக, அதிமுக கவுன்சிலர்கள் ஆதரவுடன் தலைவர், துணைத் தலைவர் பதவியை சுயேட்சை உறுப்பினர்கள் கைப்பற்ற முயன்று வரு கின்றனர். சுயேட்சைகளின் முயற்சிகளுக்கு திமுக, அதிமுக கவுன்சிலர்கள் சிலரும் ஆதரவளிப்பதால், தலைவர் பதவியை சுயேட்சை வேட்பாளர் கைப்பற்றும் நிலை உருவாகியுள்ளது.