districts

ஆட்டோக்கள் பயணிக்கும் தூரத்தை அதிகரித்திடுக

உதகை, நவ.29- ஆட்டோக்கள் பயணிக்கும் தூரத்தை அதிகரிக்க வலியறுத்தி நீலகிரி மாவட்ட ஆட்டோ ஓட்டு நர்கள் பேரணியில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்ததாக 2 ஆவது இடத்தில் சுற்றுலா தொழில் உள்ளது. இதை நம்பி ஆயிரக்கணக்கானோர் உள்ளனர். இந்த நிலையில் சுற்றுலா பயணிகளை சுற்றுலா தளங்களுக்கு அழைத்துச் செல்வதில் இதற்கு முன்னர் கார் டிரைவர்களுக்கும் ஆட்டோ டிரைவர்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து ஆட்டோக்கள் நகர் பகுதியில் இருந்து 15 கிலோமீட்டர் தூரம் மட்டுமே இயக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அதற்கு மேற்பட்ட தூரங்களில் ஆட்டோக்கள் இயக்க தடை விதித்து வட்டார போக்குவரத்து அதிகாரி உத்தரவு பிறப்பித் துள்ளார். ஆனாலும் நீலகிரி மாவட் டம் சுற்றுலா நகரம் என்பதால், பெரும்பாலான ஆட்டோ ஓட்டுநர் கள், வட்டார போக்குவரத்து அலு வலகத்தில் நிர்ணயித்த தூரத்தை விட அதிக தொலைவிற்கு சுற்றுலா பயணிகளை அழைத்து செல்கின்ற னர். இதனால், அதிக தூரம் செல் லும் ஆட்டோக்களை பிடித்து வட் டார போக்குவரத்து அலுவலர்கள் அபராதம் விதித்து வந்தனர். இந்நிலையில், நீலகிரி மாவட் டத்தில் இயக்கப்படும் ஆட்டோக் கள் 30 கிலோ மீட்டர், தூரம் வரை செல்ல எல்லை அளவை அதிக ரிக்க வேண்டும் என வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுநர்கள் திங்களன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

மேலும், உதகை மத்திய பேருந்து நிலை யத்திலிருந்து ஆட்சியர் அலுவ லகம் வரை பேரணி நடைபெற்றது. பேரணியின் போது கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப் பப்பட்டன. அப்போது ஆட்சியர் அலுவலகத்திற்கு பேரணியை அனு மதிக்காததால், உதகை மேற்கு காவல் நிலையம் முன்பு ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து போராட்டத்தில் ஈடு பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் கூறு கையில், நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கூடலூர், பந்த லூர் மற்றும் கோத்தகிரி ஆகிய பகுதிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன.  நீலகிரி மாவட்டத்தில் 15 கிலோ மீட்டர்., தூரம் வரையே ஆட்டோக்கள் இயக்க வேண்டும் என்ற உத்தரவு உள்ளது. உதகை நகரில் மட்டுமே் ஆயிரத்து 800 ஆட்டோக்கள் இயங்குகின்றன. ஆனால், இந்த ஆட்டோக்கள் நக ரின் எல்லையான 3 கி.மீ., தூரத் திற்குள்ளேயே பயணிக்க வேண் டிய நிலை உள்ளது. எனவே, தொலை தூரங்களுக்குள் ஆட் டோக்கள் சென்று வந்தால் மட் டுமே பிழைப்பு நடத்த முடியும், என்றார். இதன்பின் ஆட்டோ ஓட்டுநர்கள் ஆட்சியர் சா.ப.அம்ரித்தை நேரில் சந்தித்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.