ஈரோடு, ஜூன் 25- பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,138 கனஅடியாக அதிகரித்துள்ளது. ஈரோடு மாவட்ட மக்க ளின் முக்கிய குடிநீர் ஆதார மாக விளங்குவது பவானி சாகர் அணையாகும். இந்த அணை 105 அடி கொள்ளளவு கொண்டதாகும். பவானி சாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதி யாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக மழை பொழிவு இல்லாததாலும், தொடர்ந்து பாசனத்திற்காக அதிகளவில் நீர் திறந்து விடப் படுவதாலும் பவானிசாகர் அணை நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. அதே நேரம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்தும் தொடர்ந்து குறைந்து வந்தது. இந்நிலையில், சனியன்று நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித் துள்ளது. ஞாயிறன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 78.44 அடியாக சரிந்து உள்ளது. சனியன்று அணைக்கு விநாடிக்கு 171 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டி ருந்த நிலையில், ஞாயிறன்று காலை பவானி சாகர் அணைக்கு விநாடிக்கு 1,138 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தற்போது அணையில் இருந்து தடப் பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 800 கனஅடி, காளிங்கராயன் பாசனத்திற்கு 100 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி, கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் 1,105 கன அடி தண்ணீர் தொடர்ந்து திறக்கப்பட்டுவரு கிறது.