கோவை, டிச.12 - கோவை காந்திபுரத்தில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட உணவக் கூடத்தை தமிழக சுற்றுலத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் திங்க ளன்று திறந்து வைத்தார். காந்திபுரம், தமிழ்நாடு ஹோட் டலில் புதுப்பிக்கப்பட்ட உணவகத் தினை சுற்றுலாத் துறை அமைச்சர் மா. மதிவேந்தன் திறந்து வைத்து, பார்வை யிட்டார். இந்நிகழ்வில், சுற்றுலாத்துறை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்கு நர் சந்தீப் நந்தூரி, மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையா ளர் மு.பிரதாப் உள்ளிட்டோர் பங்கேற்ற னர். உணவக கூடுதல் கட்டிடங்களை திறந்து வைத்தப்பின் செய்தியாளர் களிடம் அமைச்சர் மா.மதிவேந்தன் கூறுகையில், தமிழ்நாடு ஹோட்டலில் உள்ள அறைகள், உணவகங்கள் ஆகி யவை புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. இதன் முதற்கட்டமாக சென்னை தீவு திடல், கோவை, திருநெல்வேலி, கன்னி யாகுமரி, காஞ்சிபுரம், ராணிப் பேட்டை ஆகிய இடங்களில் உள்ள தமிழ்நாடு ஹோட்டல்கள் புதுபிக் கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் இந்த ஹோட்டல்களின் வருமானம் அதிக ரிக்கும். மேலும், புதுப்புது வகை உண வுகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. தனியார் ஹோட்டல்களுக்கு இணை யாக வருவாய் ஈட்ட வாய்ப்பு உள்ளது.
சுற்றுலாத்துறை மேம்பாட்டு திட்டத் தின் கீழ், ஒவ்வொரு ஆண்டிலும் 10 முதல் 15 இடங்கள் தேர்வு செய்யப் பட்டு, அந்தசுற்றுலா தளங்களில் வெவ்வேறு வசதிகள் கொண்டு வரப்பட் டுள்ளன. அதன்படி பிரப்பன்வலசை, கொல்லிமலை, ஜவ்வாது மலை, ஏல கிரி மலை, கொலவாய் ஏரி, பூண்டி ஏரிகள், குண்டாறு அணை, சிற்றாறு அணை உள்ளிட்டவை புதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. மேலும், பூம்புகார் புதுப்பிக்கப்பட உள்ளது. ஒகேனக் கல் சிறந்த சுற்றுலா திட்டம் உருவாக் கப்பட்டு அதற்கு அரசாணை வெளியி டப்பட்டுள்ளது. அந்த வகையில், கோவை மாவட் டம் தமிழ்நாடு ஹோட்டலில், ஃபால் சீலிங், ஏசி வசதி, மின் விளக்குகள், தரை மற்றும் சுவர் ஓடுகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டு திறந்து வைக்கப் பட்டுள்ளன, என்றார். முன்னதாக, பொள்ளாச்சியில் பலூன் திருவிழா தனியார் பங்களிப் புடன் நடைபெற்று வந்தது. தற்போது, முதல்முறையாக தமிழ்நாடு அரசின் சார்பில் நடைபெறவுள்ளது. இவ்விழா வில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட உள்ளது. இதுகு றித்த ஆய்வை பொள்ளாச்சியில் மேற்கொண்டார்.