நாமக்கல், ஆக. 26- கந்து வட்டி தடைச்சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கம் (சிஐடியு) வலி யுறுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் பள்ளிபா ளையம் ஒன்றிய 19 ஆவது மகாசபை கூட்டம் ஆவரங்காடு சிஐ டியு அலுவலகத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. ஒன்றியத் தலைவர் ஏ.அசன் தலைமையில் நடைபெற்ற மகாச பையில், சங்க ஒன்றிய உதவித் தலை வர் எம்.அங்கமுத்து சிஐடியு கொடியை ஏற்றி வைத்தார். ஒன்றியச் செயலாளர் எஸ்.முத்துக்குமார் வேலை அறிக்கையையும், பொருளாளர் பி.முருகேசன் வரவு செலவு அறிக்கையையும் முன்மொழிந்தனர். இதில், விசைத்தறி நிர்வாகங்க ளுடன் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்த அடிப்படையில் ஜூன் 1 முதல் வழங்க வேண்டிய 3% சதம் கூலி உயர்வை அனைத்து பகுதி தொழி லாளர்களுக்கும் முழுமையாக அமல்படுத்திட வேண்டும், மைக்ரோ பைனான்ஸ் கந்துவட்டி கும்பலுக்கு எதிராக, கந்துவட்டி தடை சட்டத்தை முழுமையாக தமி ழக அரசு அமல்படுத்த வேண்டும் மைக்ரோ பைனான்ஸ் கந்து வட்டி கும்பலால் துன்புறுத்தலுக்குள்ளாகி தற்கொலை செய்து கொண்ட ஓடப்பள்ளியை பகுதியை சேர்ந்த சுஜாதா அவர்களின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் தமிழக அரசு நிவா ரணமாக வழங்க வேண்டும். வீடில் லாத விசைத்தறி தொழிலாளர்க ளுக்கு நகர்ப்புற வாழ்விட மேம் பாட்டு திட்டத்தின் கீழ் தமிழக அரசு குடியிருப்பு வழங்க வேண்டும். பள்ளிபாளையம் அரசு மருத்து வமனையில் சர்க்கரை நோய், பிரஷ ருக்கான மாத்திரைகளுக்கு பொது மக்களை அலைக்கழிக்காமல் வழங்க வேண்டும். அரசு மருத்துவ மனையை மேம்படுத்த வேண்டும், பள்ளிபாளையம் நகரம் முழுவதும் குடிநீர் குழாய் பணிக்காக தோண் டப்பட்ட சாலைகளை உடனடியாக சரி செய்திட வேண்டும், ஒன்றியம் முழுவதும் சட்ட விரோத மதுபான விற்பதையும், கஞ்சா விற்பதையும், கேரளா லாட்டரி சீட்டுகள் விற்பதை யும் தடுத்திட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டுள்ளது. இந்த மகாசபையில் ஒன்றியத் தலைவராக ஏ.அசன், ஒன்றிய செய லாளராக எஸ்.முத்துக்குமார், பொருளாளராக பி.முருகேசன் உள்ளிட்ட 22 புதிய ஒன்றியக் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யபட்ட னர். சங்க மாவட்டத் தலைவர் கே. மோகன் மகாசபை கூட்டத்தை வாழ்த்தி பேசினார். பொருளாளர் பி.முருகேசன் நன்றி கூறினார். விசைத்தறி தொழிலாளர்கள் திர ளாக இந்த கூட்டத்தில் பங்கேற்ற னர்.