districts

நீர் மின்நிலையங்களில் மின் உற்பத்தி பாதிப்பு

சேலம், ஜூன் 13- மேட்டூர் அணையிலிருந்து குறுவை  சாகுபடிக்கு தற்போது வரை தண்ணீர் திறக்கப்படாததால், நீர் மின்நிலையங்க ளில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள் ளது.

சேலம் மாவட்டம், மேட்டூர் அணை யிலிருந்து காவிரி டெல்டா பாசனத் திற்கு தண்ணீர் திறக்கும் காலங்களில் நீர் மின்நிலையங்கள் மூலம் 460 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். மேட்டூர் அணை மின்நிலையத்தில் 50  மெகாவாட் மின்சாரமும், சுரங்க மின் நிலையத்தில் 200 மெகாவாட் மின்சார மும் உற்பத்தி செய்யப்படும். அதுபோல செக்கானூர், நெரிஞ்சிப்பேட்டை, ஊராட்சிக்கோட்டை, குதிரைக்கல் மேடு  உள்ளிட்ட ஏழு இடங்களில் தலா 30  மெகாவாட் திறன் கொண்ட கதவணை கள் அமைக்கப்பட்டுள்ளன.

அங்கும் நீர்  மின் உற்பத்தி நடைபெறும். ஆனால்,  நடப்பாண்டில் பருவமழை தவறியதா லும், கர்நாடாகா அணைகளிலிருந்து தண்ணீர் திறக்கப்படாததாலும் அணை யில் போதிய அளவு நீர் இல்லை. இத னால் குறுவை சாகுபடிக்காக அணை யிலிருந்து தண்ணீர் திறக்கப்படாத தால், நீர் மின்நிலையங்களில் 460  மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட் டுள்ளது.