districts

img

இடுவாயில் இ சேவை மையம் ஆண்டிபாளையம் கூட்டுறவு சங்கம் முடிவு

திருப்பூர், நவ. 17 - இடுவாய் பகுதியில் இ சேவை மையம்  அமைக்க வேண்டும் என்று இடுவாய் ஊராட்சி மன்றத் தலைவர் கே.கணேசன் முன்வைத்த கோரிக்கையை ஏற்று, ஆண்டிபாளையம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்க மகாசபை கூட்டத்தில் உடனடியாகத் தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது. ஆண்டிபாளையம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தின் ஆண்டு மகாசபை கூட்டம் புதனன்று காலை 11 மணிக்கு இடுவா யில் உள்ள சின்னம்மன் மண்டபத்தில் சங்கத் தின் தலைவர் ஏ.ஆனந்தன் தலைமையில் நடைபெற்றது. ஆண்டிபாளையம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தின் முன்னாள் தலைவர் வே. பழனிசாமி கலந்து கொண்டார்.       இடுவாய் ஊராட்சி மன்ற தலைவர் கே.கணேசன் பங்கேற்று வாழ்த்திப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், கூட்டுறவு சங்கம் சார்பாக இடுவாய் பகுதியில் இ சேவை மையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தார். இதை ஏற்று அப்போதே மகாசபை தீர்மான மாக நிறைவேற்றப்பட்டது. கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர்களில் இறந்தவர்கள் மற்றும் பயன்பாட்டில் இல்லா மல் இருக்கும் உறுப்பினர்களை நீக்கம் செய்து புதிய உறுப்பினர் பட்டியல் வெளியிட நிர்வாகம் ஆவண செய்ய வேண்டும் எனவும் ஊராட்சிமன்றத் தலைவர் கே.கணேசன் கோரிக்கை விடுத்தார். திருப்பூர் நிலவள வங்கி இயக்குனர் கே.ஈஸ்வரன், மங்கலம் பாசன சபை தலைவர்  தங்கவேல், மங்கலம் பாசன சபை முன்னாள் தலைவர் பொன்னுசாமி, கூட்டுறவு சங்கத் தின் இயக்குநர்களும்,சங்கத்தின் உறுப்பி னர்களும் திரளாக கலந்து கொண்டனர்.