districts

ஓய்வுபெற்ற தூய்மை பணியாளர்கள் கௌரவிப்பு

தருமபுரி, ஜூலை 2- காரிமங்கலம் பேரூராட்சியில் பணி யாற்றி ஓய்வுபெற்ற தூய்மை பணி யாளர்களுக்கு பேரூராட்சி மன்றம் சார் பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டு, பரிசு கள் வழங்கப்பட்டன. தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் பேரூராட்சி கூட்டம் தலைவர் மனோ கரன் தலைமையில் நடைபெற்றது. இதில் செயல் அலுவலர் ஆயிஷா, கவுன்சிலர்கள், பேரூராட்சி அலுவலர் கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத் தில் கழிவுநீர் கால்வாய், குடிநீர் குழாய் கள் அமைத்தல், மினி டேங்க் அமைத் தல் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட் டது. தொடர்ந்து பேருந்து நிலையத் தில் விரிவாக்க பணி, சந்தை மேம்படுத் தும் பணி ஆகியவற்றிற்காக ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து ஓய்வுபெற்ற தூய்மை பணி யாளர்கள் வெங்கடலட்சுமி, கலா ஆகி யோருக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரி விக்கப்பட்டது.

;