கோவை, ஏப். 27- தன் கட்சிக்கு விழ வேண்டிய ஒரு லட்சம் ஓட்டுக்கள் இல்லை என அண் ணாமலை புதுக்கரடி விட்ட நிலையில், கள ஆய்வுக்கு பின்னர் தயாரிக்கப் பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை அனைத்து அரசியல் கட்சிகளின் முன்னி லையில் வெளியிடப்பட்டது என்றும், இதில், எந்த ஆட்சேபனையும் வர வில்லை என கோவை மாவட்ட ஆட்சி யர் கிராந்தி குமார் பாடி விளக்கமளித் துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:- கோவை மாவட்டத்தில் இடம்பெற் றுள்ள 10 சட்டமன்ற தொகுதிகள் உள் ளது. இதில், வசித்து வரும் 18-வயது நிரம்பிய மற்றும் தகுதியுடைய நபர்க ளின் பெயர்களை வாக்காளர் பட்டிய லில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், இறப்பு, நிரந்தரக் குடிபெயர்வு, இரு முறைப் பதிவு உள்ளிட்ட காரணங்க ளினால் தொடர்புடைய நபர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது. இதுகு றித்து, ஒவ்வொரு ஆண்டும், இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின் பேரில், அக்டோபர் மாதத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இதன் தொடர்ச்சியாக குறைந்தபட் சம் 45 நாட்கள் நடைபெறும் சிறப்பு சுருக்கமுறை திருத்தக் காலத்தின் போது, பெறப்படும் வாக்காளர் பட்டிய லின் மீதான உரிமை கோரல்கள் மற்றும் ஆட்சேபனைகள் குறித்து பரிசீலனை செய்யப்படும். இதில், புதியதாக பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் உள்ளிட்ட மனுக்களின் மீது கள ஆய்வு செய்து முடிக்கப்பட்ட பின்னர், இறுதி வாக்கா ளர் பட்டியல் ஜனவரி மாதத்தில் வெளி யிடப்படும். அதன் அடிப்படையில் 2024-ஆம் ஆண்டிற்கான வரைவு வாக்காளர் பட் டியல் கடந்த ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னி லையில் வெளியிடப்பட்டது. மேற்படி அச்சிடப்பட்ட வாக்காளர் பட்டியலின் 2 பிரதிகள் அனைத்து அங்கீகரிக்கப் பட்ட அரசியல் கட்சியினருக்கும் வழங் கப்பட்டது. பின்னர் நடைபெற்ற சிறப்பு சுருக்கமுறை திருத்த காலத்தில், வாக் காளர்களிடமிருந்து பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தல் உள்ளிட்ட கார ணங்களுக்காக முறையே படிவம் -6, படிவம் -7 மற்றும் படிவம் -8 ஆகியவை யும், மேலும், அரசியல் கட்சிகள் மூல மாக நியமனம் செய்யப்பட்ட வாக்குச் சாவடி முகவர்கள் மூலமாகவும் உரிய படிவங்கள் பெறப்பட்டு தொடர் நடவ டிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், இந்திய தேர்தல் ஆணை யத்தின் அறிவிப்பின்படி கடந்த ஆண்டு நவம்பர் 4, 5, 25, 26 ஆகிய தேதிகளில் அவர்களது குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே உள்ள வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத் தப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, சிறப்பு சுருக்க முறைத் திருத்தத்திற்கான நடவ டிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட் டது. இதில், அனைத்து அங்கீகரிக்கப் பட்ட கட்சிகளுக்கான ஆய்வுக் கூட்டம், வாக்காளர் பட்டியலுக்கான சிறப்பு பார் வையாளர் தலைமையில் கடந்த ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி நடை பெற்றது.
இக்கூட்டத்தில், ஏற்கெனவே கடந்த ஆண்டு அக்டோபர் 27 ஆம் தேதியன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் நீக்கம் செய்யப்பட்ட பெயர் கள் குறித்த குறிப்பான ஆட்சேபனை ஏதும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி யினரால் தெரிவிக்கப்படவில்லை. மேற்படி, வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில், கோவை மக்க ளவைத் தொகுதிக்குட்பட்ட சூலுார், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, கோவை தெற்கு மற்றும் சிங்காநல் லுார் ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிக ளுக்கான மொத்த வாக்காளர் எண் ணிக்கை 16,71,003 ஆகும். இதில், 47,559 வாக்காளர்கள் புதியதாக சேர்க்கப் பட்டும் மற்றும் 28,364 வாக்காளர்கள் நீக் கம் செய்யப்பட்டும் உள்ளனர். மேற்படி விவரங்களை சரிபார்த்து, கருத்துக்க ளைத் தெரிவிக்கும் வகையில், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசி யல் கட்சியினருக்கும், தலா 2 அச்சிடப் பட்ட பிரதிகள் வீதம் வழங்கப்பட்டன. இப்பட்டியலில் கண்டுள்ள பெயர் நீக் கம் தொடர்பான குறிப்பான ஆட்சே பனை ஏதும் அங்கீகரிக்கப்பட்ட அரசி யல் கட்சியினரால் தெரிவிக்கப்பட வில்லை. மேலும், நடப்பு மக்களவைப் பொதுத் தேர்தல், 2024–னை முன் னிட்டு, இந்திய தேர்தல் ஆணையத் தால் அறிவிக்கப்பட்ட வேட்பு மனு தாக் கல் செய்வதற்கான கடைசி நாளான கடந்த மார்ச் 23ஆம் தேதிக்கு 10 நாட் கள் முன்பு வரை, வாக்காளர் பட்டிய லில் பெயர் சேர்க்கை, நீக்கம் மற்றும் திருத்தம் உள்ளிட்ட நடவடிக்கைகளை இணைய வழியாகவும், மேற்படி படி வங்களை நேரடியாகப் பூர்த்தி செய்து வழங்கிடும் வகையில் நடவடிக்கை கள் எடுக்கப்பட்டன. அதன்படி, கடந்த மார்ச் 23ஆம் தேதி வெளியிடப்பட்ட தொடர் திருத்த வாக்காளர் பட்டியலில், கோவை மக்களவைத் தொகுதிக்குட் பட்ட சூலுார், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, கோவை தெற்கு மற் றும் சிங்காநல்லுார் ஆகிய 5 சட்டமன் றத் தொகுதிகளுக்கான மொத்த வாக்கா ளர் எண்ணிக்கை 17,08,369 ஆகும். இதில், 26,504 வாக்காளர்கள் புதிய தாக சேர்க்கப்பட்டும் மற்றும் 8,333 (இறப்பு-1090, நிரந்தர குடிபெயர்வு – 6998, இரட்டைப் பதிவு - 245) வாக்கா ளர்கள் நீக்கம் செய்யப்பட்டும் உள்ள னர். மேலும், இறுதி வாக்காளர் பட்டிய லின் படி, திருப்பூர் மாவட்டத்திற்குட் பட்ட பல்லடம் சட்டமன்றத் தொகுதி யின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 3,97,755 உடன் சேர்த்து, கோவை மக்க ளவைத் தொகுதியின் மொத்த வாக்கா ளர் எண்ணிக்கை 21,06,124 ஆகும். மேலும், பொதுமக்கள் தங்களது பெயரினை வாக்காளர் பட்டியலில் புதி யதாக சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத் தம் மேற்கொள்வது தொடர்பாக “NVSP.in’ என்ற இணைய வழி மூலமா கவும், “Voter Help Line” என்ற செயலி மூலமாகவும் மற்றும் கோவை மாநக ராட்சிக்குட்பட்ட அனைத்து மண்டல அலுவலகங்கள், அனைத்து வருவாய் வட்டங்களில் அமைந்த உதவி வாக்கா ளர் பதிவு அலுவலர்,வருவாய் வட்டாட் சியர் அலுவலகங்கள் மற்றும் வருவாய் கோட்டங்களில் அமைந்த வாக்காளர் பதிவு அலுவலர், சார் ஆட்சியர், வரு வாய் கோட்டாட்சியர் அலுவலகங்களி லும் மனுக்களை நேரடியாக சமர்ப்பிக் கலாம் என தெரிவித்துள்ளார்.