districts

img

கனமழை: குழந்தைகள் மகிழ்ச்சி

நாமக்கல், மே 10- ராசிபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழனன்று மாலை பெய்த மழையில் நனைந்தபடி, சிறுவர்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாகவே வெயி லின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. தொடர்ந்து வெயில் 100 டிகிரிக்கு மேலாக வாட்டி வதைத்த நிலை யில் பொதுமக்கள், குழந்தைகள் பெரியவர்கள் என  பலர் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும், பல மாதங்க ளாக இப்பகுதியில் மழை இல்லாமல் மிகவும் சிரமத் திற்கு தள்ளப்பட்ட நிலையில், திடீரென வியாழனன்று மாலை கனமழை பெய்தது. ராசிபுரம் நகரப்பகுதி மற்றும்  சுற்றுவட்டார பகுதிகளான வெண்ணந்தூர், பழந்தின்னிப் பட்டி, செளதாபுரம், மதியம்ப்பட்டி, அத்தனூர் போன்ற  பல்வேறு இடங்களில் ஒரு மணி நேரம் கனமழை பெய் தது. நீண்ட நாள் கழித்து பெய்த இந்த மழையால் கிரா மப்புற இளைஞர்கள், மாணவர்கள் மழையில் நனைந்து உற்சாகமாக ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.