districts

img

வெப்பம் பூக்கும் பெருநிலம் நூல் வெளியீட்டு விழா

 கோவை, ஏப்.4 – “ வெப்பம் பூக்கும் பெருநிலம்”  கவிதை நூல் வெளியீட்டு விழா கோவையில் ஞாயிறன்று நடைபெற் றது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் கோவை மாவட்ட நிர்வாகிகளில் ஒருவரான கவிஞர் தங்க.முருகேசன் எழுதிய “வெப்பம் பூக்கும் பெருநிலம்” நூல் வெளியீட்டு விழா கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தாமஸ் கிளப்பில் நடைபெற்றது. தமுஎகச கோவை மாவட்ட செயலாளர் மு.ஆனந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு ஜென்னிஸ் வரவேற்புரையாற்றினார். மூத்த எழுத்தாளர் சி.ஆர்.இரவீந்திரன் நூலை வெளியிட புலவர் பூ.அ.இரவீந்திரன், கா.ப.கலையரசன், இரா.ஜனார்த்தனன், இளஞ்சேரல் உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர்.  முன்னதாக, நூல் குறித்து தமுஎகச மாவட்ட தலைவர் தி.மணி, கவிஞர் கோவை காமு, முனைவர் சுப.செல்வி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிறைவாக, நூலா சிரியர் தங்க.முருகேசன் ஏற்புரையாற்றினார். இந்நூல் வெளியீட்டு விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.