திருப்பூர், மார்ச் 6- உப்பாறு அணைக்கு தண்ணீர் திறந்து விடக் கோரி மாவட்ட ஆட்சியர் வாகனத்தை செவ்வாயன்று முற்றுகை யிட்ட விவசாயிகளை ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வ ராஜ் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளார். திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தலைமையில் 240 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று. இதில், ஆதிதிரா விட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பங்கேற்றார். இதில், உப் பாறு பாசன விவசாயிகள் 50க்கும் மேற் பட்டோர் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்து ராஜை சந்தித்து உப்பாறு அணைக்கு தண்ணீர் வழங்கும் நடவடிக்கை தொடர் பாக சந்தேகங்களை கேட்பதற்காக காத் திருந்தனர். நலத்திட்ட உதவிகள் வழங் கிவிட்டு மண்டபத்தில் இருந்து வெளியே வந்த மாவட்ட ஆட்சியரிடம் பேச முற்பட்டனர். அப்போது மாவட்ட ஆட்சியர் எந்த பதிலும் தெரிவிக்காமல் வாகனத்தில் சென்றதாக கூறப்படுகி றது. இதையடுத்து, உப்பாறு பாசன விவ சாயிகள் மாவட்ட ஆட்சியரின் வாக னத்தை முற்றுகையிட்டனர். அங்கி ருந்து காவலர்கள் விவசாயிகளை கைது செய்து தனியார் திருமண மண்ட பத்தில் வைத்து மாலை விடுவித்தனர். இந்நிலையில் புதனன்று ஆதிதிரா விடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் உப்பாறு பாசன விவசாயி களை பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.