districts

img

ஜெயின் இரிகேசன் தொழிலாளருக்கு சிஐடியு ஆதரவு

உடுமலை, ஜன.10-  உடுமலை ஜெயின் இரிகேசன் சிஸ்ட்ம்ஸ் லிட் நிறுவனத்தில் தொடர் உள்ளி ருப்பு போராட்டம் நடத்தும் தொழிலாளர்க ளுக்கு ஆதரவாக உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பு திங்களன்று சிஐ டியு சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம், உடுமலை தாலுகா, எலையமுத்தூர் பகுதியில் ஜெயின் இரி கேசன் சிஸ்டம்ஸ் லிட் என்ற விவசாய பொருள்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி யாற்றி வருகின்றனர். இங்கு வேலை செய் யும் தொழிலாளர்களுக்கு முறையாக சம்பளம் வழங்காமலும், தொழிலாளர் சட் டங்களை முறையாக அமல்படுத்தாமல் இருந்த நிலையில், சிஐடியு தொழிற்சங்கத் தின் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி தற் பொழுது முறையாக சம்பளம் உள்ளிட்ட சட்ட சலுகைகள் பெறப்பட்டது. இத னால் பெரும் ஆத்திரத்திலிருந்த ஆலை நிர் வாகம் பழிவாங்கும் நோக்கில் தொழிற்சங்க நிர்வாகிகள் உட்பட 29 பேரை வெளி மாநி லங்களுக்கு பணி மாறுதல் செய்து உத்தர விட்டுள்ளது. இதைக்கண்டித்து அந்நிறு வன தொழிலாளர்கள், கடந்த மாதம் 27ஆம்  தேதி முதல் நிறுவனத்தின் உள்ளே அமைதி யான முறையில் உள்ளிருப்பு போராட்டத் தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 15 நாட்க ளாக உள்ளிருப்பு போராட்டம் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பு திங்களன்று சிஐ டியு சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். உடுமலை பொது தொழிலா ளர்கள் சங்கத்தின் தலைவர் ரங்கநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட் டத்தில் சிஐடியு மாவட்ட துணை செயலா ளர் ஜெகதீசன், மோட்டார் சங்கத்தின் மாநி லக்குழு உறுப்பினர் சுதா சுப்பிரமணியன், போக்குவரத்து சங்கத்தின் விஸ்வநாதன், உடுமலை ஆட்டோ சங்கத்தின் தலைவர் தண்டபாணி, கட்டிட கட்டுமான சங்கத்தின் கனகராஜ், மாற்றுத்திறனாளிகள் சங்கத தின் மாலினி, நடைபாதை சங்கத்தின் பாபு உள்ளிட்ட திராளானோர் கலந்து கொண்ட னர்.