சேலம், மார்ச் 5- போதைப் பொருட்கள் பயன்பாடு அதிகமாக இருப்பது போன்று பிரத மர் பேசுவது அவர் பதவிக்கு நல்ல தல்ல. இதனை கட்டுப்படுத்துவதற் கான அத்தனை அதிகாரங்களும் ஒன் றிய அரசிடம் உள்ளது. போதைப் பொருள் அதிகம் பிடிபடுவது குஜ ராத் மாநிலத்தில் தான் என சா.பீட் டர் அல்போன்ஸ் மோடியின் பேச் சுக்கு குட்டு வைத்துள்ளார். சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில், தமிழ்நாடு மாநில சிறுபான்மையி னர் ஆணையக் கலந்துரையாடல் கூட்டம், மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் சா.பீட்டர் அல் போன்ஸ் தலைமையில் செவ்வா யன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மொத்தம் 181 சிறுபான்மையின பயனாளிகளுக்கு ரூ.21.51 லட்சம் மதிப்பிலான பல்வேறு அரசு நலத் திட்ட உதவிகளை மாநில சிறு பான்மையினர் ஆணையத் தலை வர் சா. பீட்டர் அல்போன்ஸ் வழங்கி னார். இதன்பின் அவர் செய்தியா ளர்களிடம் பேசுகையில், அதிமுக ஆட்சியில் சிறுபான்மை கல்வி நிறு வனங்களுக்கான சான்றிதழ் வழங் குவதில் சிக்கல் இருந்தது. தற்போது நிரந்தர அங்கீகார சான்றிதழ் வழங்கு வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது. சமூக வலைதளங்கள் மூல மாக சிறுபான்மை மக்களுக்கு எதி ராக தவறான சித்தரிப்பு செய்ப வர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் படுமா? என்ற கேள்விக்கு, பெரும் பான்மையினருக்கு எதிரியாக சிறு பான்மையினரை கட்டமைக்க மிகப் பெரிய சதி நடைபெற்று வருகிறது. இதற்கு முக்கியமான ஆளாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இருந்து வருகிறார். சமூக வலைத ளங்களில் தவறான தகவல்களை பரப்பி மத உணர்வை தூண்டி வருகி றார். இதுபோன்ற பேச்சு தவிர்க் கப்பட வேண்டும். இதுபோன்ற தவறு கள் உண்மையான தகவலா என்று ஆராய்ந்து சமூக வலைதளங்களிலி ருந்து நீக்குவதற்கு தனிக்குழு அமைக்கப்பட்டு செயல்பட்டு வரு கிறது. அதை நீக்குவதற்கு நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொய் யான தகவல்களை பரப்பவர்கள் கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். இந்தியாவில் போதைப் பொருட் களால் இளைஞர்கள், சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத் தில் போதைப் பொருட்கள் பயன் பாடு அதிகமாக இருப்பது போன்று பிரதமர் பேசுவது அவர் பதவிக்கு நல்லதல்ல. போதைப்பொருள் அதி கம் பிடிபடுவது குஜராத் மாநிலத்தில் தான். பல்லாயிரக்கணக்கான கிலோ போதைப்பொருட்கள் நடமாட் டத்தை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து அதிகாரமும் ஒன்றிய அர சிடம் தான் உள்ளது. அரசியல் ஆதா யத்திற்காக மாநில அரசாங்கத்தின் மீது பொய் பிரச்சாரம் செய்யப்ப டுவதாக எண்ணுகிறேன். போதைப் பொருட்களை கட்டுப்படுத்துவதற்கு முழு அதிகாரம் பிரதமருக்கும், உள்துறை அமைச்சருக்கும் தான் உள்ளது; அவர்களுக்கு தெரியா மல் இதுபோன்று எந்த சம்பவம் நடை பெற வாய்ப்பு இல்லை என்றார். இக்கூட்டத்தில், மாநில சிறுபான் மையினர் ஆணைய செயலாளர் வா. சம்பத், துணைத்தலைவர் எம்.எம். அப்துல் குத்தூஸ், சேலம் நாடாளு மன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த் திபன், சட்டமன்ற உறுப்பினர்கள் ரா. ராஜேந்திரன், எஸ்.சதாசிவம், மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தா தேவி, மாநகராட்சி ஆணையாளர் சீ. பாலச்சந்தர், காவல் கண்காணிப் பாளர் ஏ.கே.அருண் கபிலன், காவல் துணை ஆணையர் ந.மதிவாணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.