நாமக்கல், நவ.5- சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்பு தானம் செய்த அரசுப்பள்ளி ஆசிரியைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப் பட்டது. நாமக்கல் மாவட்டம், திருச்செங் கோடு ஒன்றியம், குச்சிபாளையம் ஊராட்சி பகுதியைச் சேர்ந்தவர் ஆசி ரியை மஞ்சுளா. இவரது கணவர் ஈஸ்வரன். இவர்களது மகள் பூங் குழலி. மஞ்சுளா ஆலாம்பாளையம் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், மஞ்சுளா கடந்த நவ.3 ஆம் தேதியன்று பள்ளி பாளையம் எஸ்.பி.பி. காலனி வாய்க் கால் பாலம் பகுதி வழியாக இருசக் கர வாகனத்தில் பணிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஏற் பட்ட சாலை விபத்தில் சிக்கி மூளைச் சாவடைந்தார். இதனையடுத்து ஆசி ரியை மஞ்சுளாவின் உடல் உறுப்பு களை தானமாக வழங்க குடும்பத்தி னர் முடிவு செய்தனர். பெருந்துறை சானிடோரியம் மருத்துவமனையில் கண், சிறுநீரகம், இதயம், தோல் உள் ளிட்ட 10க்கும் மேற்பட்ட உடல் உறுப் புகள் தானம் செய்யபட்டன. இதைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் முதல் உடல் உறுப்பு தானம் செய்த அரசு ஊழியருக்கு தமிழ்நாடு அரசு ஆணைப்படி, அரசு மரியாதை செய் யப்பட்டது. மாவட்ட ஆட்சியர் ச.உமா உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள், அவரது இல்லத்தில் வைக்கப்பட்டி ருந்த உடலுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செய்தனர்.