நாமக்கல், அக்.8- பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் செவ்வாயன்று ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். 21 மாத கால நிலுவைத்தொகை, முடக்கப்பட்ட அகலவிலைப்படி, பறிக்கப்பட்ட சரண்டர் விடுப்பு உள் ளிட்ட உரிமைகளை வழங்க வேண் டும். சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை, பணிக்கால மாக முறைப்படுத்த வேண்டும். அரசு துறைகளிலுள்ள காலிப் பணியிடங்கள் அனைத்தையும் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் செவ்வா யன்று மாலை நேர ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ராஜேந்திர பிரசாத் தலைமை வகித்தார். இதில் மாவட் டச் செயலாளர் முருகேசன், மாவட்ட துணைத்தலைவர்கள் இளவேந் தன், நந்தினி உட்பட பலர் கலந்து கொண்டனர். தருமபுரி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ. தெய்வானை தலைமையில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. மாநில துணைத்தலைவர் கோ.பழனியம் மாள், மாவட்டப் பொருளாளர் எம். அன்பழகன், மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.முருகன், வேளாண் மைத்துறை அமைச்சு பணியாளர் சங்க மாநிலச் செயலாளர் ஆர்.ஜெயவேல், கூட்டுறவுத்துறை ஊழி யர் சங்க மாவட்டத் தலைவர் பி.சி. குமார், சத்துணவு ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் பெ.மகேஸ் வரி ஆகியோர் உரையாற்றினர். இதில் சிஐடியு மாநிலச் செயலாளர் சி.நாகராசன், அரசு ஊழியர் சங்க முன்னாள் மாவட்டச் செயலாளர் ஏ.சேகர், அனைத்துத்துறை ஓய்வூ தியர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.பெருமாள், ஜாக்டோ - ஜியோ நிதி காப்பாளர் கே.புகழேந்தி உட் பட பலர் கலந்து கொண்டனர். சேலம் சேலம் கோட்டை மைதானத் தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் திருவேரங்கன் தலைமை வகித்தார். இதில் அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலா ளர் சுரேஷ், பொருளாளர் செல்வம், நிர்வாகிகள் சண்முகம், சிங்கரா யன், அமராவதி, ராணி, திருநாவுக் கரசு, வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில துணைத்தலைவர் அர்த்தனாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.