districts

img

அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மறியல்

திருப்பூர் ஜூலை 6- பல்லடம் அருகே அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துனரை தாக்கப்பட்ட தால், அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும்  நடத்துனர்கள் பேருந்துகளை நிறுத்தி  செவ்வாயன்று இரவு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டையில் இருந்து திருப்பூர் நோக்கி  அரசு பேருந்து 20க்கும் மேற்பட்ட பயணி களுடன் செவ்வாயன்று இரவு புறப் பட்டது. பேருந்தை அருண்குமார் என்பவர் ஓட்டி வந்தார். இதில், மாரி முத்து நடத்துநராக இருந்தார். இந் நிலையில் பேருந்து பல்லடத்தை  அடுத்த மகாலட்சுமி நகர் அருகே  சென்று கொண்டிருந்தபோது, அங்கி ருந்த மகாலட்சுமி நகர் பிரிவில் இருந்து வந்த கார் ஒன்று அரசு பேருந்து வரு வதை கவனிக்காமல் திடீரென உள்ளே  புகுந்து பல்லடம் - திருப்பூர் பிரதான  சாலையில் திரும்பியது. இதனை பார்த்த ஓட்டுநர் அருண்குமார் உடன டியாக பேருந்தை நிறுத்தினார்.

இத னால் பேருந்து கார் மீது மோதாமல் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. முன்னால் சென்ற கார் அருகே உள்ள திருமண மண்டபத்திற்குள் நுழைந் தது. இதனையடுத்து மண்டபத் தின் முன் பேருந்தை நிறுத்திய அருண்கு மார்,  மாரிமுத்து மற்றும் பயணிகள் சிலர்  காரில் பயணம் செய்தவர்களிடம், இப் படி தாறுமாறாக ஓட்டலாமா, விபத்து  ஏற்பட்டு இருந்தால் என்ன செய்வது என  கேட்டுள்ளனர். அப்போது காரில் வந்த வர்களுக்கும், பேருந்தில் வந்தவர்க ளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட் டுக் கைகலப்பில் முடிந்தது. ஓட்டுநர் -  நடத்துனரை காரில் வந்தவர்கள் தாக்கி னர். இது குறித்து தகவல் அறிந்து  அந்த வழியே சென்ற அரசு பேருந்து  ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் திரு மண மண்டபம் முன்பு பேருந்துகளை நிறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடம்  வந்த பல்லடம் காவல்துறை இரு தரப் பையும் சமாதானப்படுத்த முயன்றனர். அப்போது காரை குறுக்காக ஓட்டி விபத்தை ஏற்படுத்த முயற்சி செய்தவர் கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு பேருந்து ஓட்டுநர்கள் தரப் பில் வலியுறுத்தப்பட்டது. இது குறித்து  அரசு பேருந்து ஓட்டுநர் அருண்குமார் கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் அருகே உள்ள அருள்புரத்தை சேர்ந்த  செல்வகுமார், பிரேம்குமார் உள்பட 3  பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட் டுள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து  காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.