districts

img

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்....

ஒன்றாக இருந்த கோவை மற்றும் சேலம் மாவட்டங் களைச் சேர்ந்த ஏராளமான கம்யூனிஸ்டுகள் இந்திய விடுதலைப்போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். கொடிய சிறைவாசம், நீண்ட காலத் தண்டனைகளை பெற்றுள்ளனர். வ.உ.சிதம்பரனார் செக்கிழுத்த கோவை சிறையில், கே. ரமணி கைகளில் ரத்தம் சொறியும் அளவிற்கு ராகி அரைத் துள்ளார். இவ்விரு மாவட்டங்களைச் சேர்ந்த பலர் அலி புரம் சிறை என்று அழைக்கப்படும் பெல்லாரி சிறையில் குளிப்பதற்கு கூட நீரின்றி மிகவும் சிரமப்பட்டு உள்ள னர்.  கோவையில் அன்றைய இளம் கம்யூனிஸ்ட் தலைவர் கே.ரமணி, 1939 ஆம் ஆண்டின் இறுதியில் பொய் வழக்கு களில் குற்றம் சாட்டப்பட்டு 16 மாதம் சிறை தண்டனை பெற் றார். 1941 ஆம் ஆண்டில் விடுதலையான அவர் சிறை வாயிலி லேயே, பாதுகாப்புச் சட்டத்தின் படி கைது செய்யப்படு 1942 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை வேலூர் சிறையில் வைக்கப்பட்டார். சேலம் எஸ்.எம்.ராமையா 1939 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டு ஒன்றரை ஆண்டு காலம் சிறை யில் இருந்தார். சேலம் கே.செல்வராஜ் 1939 ஆம் ஆண்டிலி ருந்து 1941 ஆம் ஆண்டு வரை இரண்டு ஆண்டுகள் பாது காப்பு கைதியாக இருந்தார். கோவை ஆர்.கிசன் 1940 ஆம்  ஆண்டு ஆறு மாத சிறைதண்டனை அனுபவித்தார். பவானி பி.கே.ராமசாமி ஓராண்டு தண்டனை அனுபவித்தார். பா. விருத்தகிரி, திருப்பூர் டி.வி.கிருஷ்ணன், பி.கே.ராமசாமி, ஆர்.பாண்டுரங்கன், ஆர்.கே.கண்ணன் ஆகியோர் 1941-42 ஆண்டுகளில் பாதுகாப்பு கைதிகளாக வைக்கப்பட்டனர். பொள்ளாச்சி வி.ராதாகிருஷ்ணன் 1941 மே மாதம் முதல் 1942 ஆகஸ்ட் வரை தலைமறைவாக இருந்தார். பின்னர் ஆகஸ்ட் 12இல் கைது செய்யப்பட்டு அக்டோபர் 12 வரை கோவை சிறையில் அடைக்கப்பட்டார். 

1940 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பம்பாயில் கைது  செய்யப்பட்ட என்.கே. கிருஷ்ணன் பாதுகாப்பு கைதியாக வைக்கப் பட்டு 1942 ஏப்ரலில்  தான் விடுதலையா னார். பொள்ளாச்சி ஏ.டி.சுப்பிரமணியம் 1941 ஆம் ஆண்டு ஆறு மாத  தண்டனை விதிக்கப்பட்டார். பொள்ளாச்சி கே.பாலதண்டா யுதம் 1940 ஆம் ஆண்டில் யுத்த எதிர்ப்பு பிரச்சாரம் செய்ததற் காக 18 மாத சிறைதண்டனை விதிக்கப்பட்டார். விடுதலை ஆன தும் சிறை வாயிலிலேயே பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 1942 ஆம் ஆண்டு ஜூலை வரை சிறையில் இருந்தார்.  1940 ஆம் ஆண்டு தனி நபர் மறியலில் ஈடுபட்ட கிருஷ்ண கிரி டாக்டர் அண்ணாஜியும் அவர் துணைவியார் லலிதா அண்ணாஜியும் 9 மாத கால சிறை தண்டனை பெற்றனர் கோவையில் பலமாக உருவாகி வந்த கம்யூனிஸ்ட் இயக்கத்தையும், தொழிற்சங்க இயக்கத்தையும் அழிக்கும் பொருட்டு ஆங்கிலேய அரசாங்கம் 1940 ஆம் ஆண்டு டிசம் பர் மாதத்தில் கோவை சதி வழக்கு என்று ஒரு வழக்கை நடத்தியது. இதில், என்.சி.சேகர், வில்லியம் ஸ்னாக்ஸ், பொள்ளாச்சி பி.என்.ராமலிங்கம், கே.எஸ்.வாசன், எம்.கே. சாமி, மேட்டுப்பாளையம் எம்.ராமசாமி, எம்.அருணாச்சலம், கே.சுந்தரம், ஆர்.கிசான், சீலம்பால், வி.ராதாகிருஷ்ணன், பி.கே.ராமசாமி, ஆர்.கேகண்ணன், ஏ.டி.பாலசுப்பிரமணி யம், பொள்ளாச்சி ஆர்.கந்தசாமி மற்றும் அமீது, கோவை  எம்.பூபதி ஆகியோர் இங்கிலாந்து மன்னர் ஆட்சியை  கவிழ்க்க சதி செய்தனர் என்று குற்றம் சாட்டி, விசாரணை 6 மாத காலம் நடைபெற்றது. இதில், பி.கே.ராமசாமி மற்றும் ஆர்.கே.கண்ணன் இருவரும் தலைமறைவானதால் அவர்கள் மீது வழக்கு நடத்தப்படவில்லை. வி.ராதாகிருஷ் ணன் விடுதலை செய்யப்பட்டார். மற்றவர்களுக்கு இரண் டரை ஆண்டு முதல் நான்கரை ஆண்டு வரை சிறை தண் டனை விதிக்கப்பட்டது. மீண்டும் 1942 ஆம் ஆண்டு  ஆகஸ்ட் மாதம் முதல் 1945 ஆம் ஆண்டிற்குட்பட்ட காலத்தில் மக்கள் பிரச்சனைகளுக்காக போராட்டங்களை நடத்தி யதற்காகவும், ஆங்கிலேய அரசின் தடையை மீறியதற்காக வும் இவ்விரு மாவட்டங்களிலும் கம்யூனிஸ்ட்கள் பலர் கைது  செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டனர்.

ஈரோடு கோவிந்தசாமி ஓராண்டு, மேட்டுப்பாளையம் மகாதேவன் ஒன்றரை ஆண்டு, கண்ணாம்பாளையம் கே.பி. சின்னையன் 11 மாதம், ஈரோடு ராகப்பன் ஓராண்டு சிறை வாசம் மற்றும் 30 கசையடிகள், கண்ணாம்பாளையம் கே.வி. பழனிச்சாமி சூலூர் விமான நிலையம் மற்றும் தபால் நிலைய  தீவைப்பு வழக்கில் இரண்டரை வருடம், புளியம்பட்டி ஆர்.வேலம்மாள் ஓராண்டு என தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் திருப்பூர் சைமன் பால், டி.பழனிச்சாமி போன்றோ ரும் வெவ்வேறு கால அளவு சிறை தண்டனை பெற்றனர்.  இதே காலகட்டத்தில் பவானி பி.என்.பாலு, சிவிசி.ரங்க ராஜ், பி.கே.ராமசாமி, பி.ஏ.ராஜகோபால் ஆகியோர் கைது  செய்யப்பட்டு சித்திரவதைக்குள்ளாகி சிறையில் அடைக் கப்பட்டனர். 1943 ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி உண்ணா விரதம் இருந்த போது, மாணவர் வேலை நிறுத்தத்தை  தூண்டியதற்காக, மேட்டுப்பாளையம் எம்.ஆர்.அருணாச் சலம் ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டார். கோவை  மற்றும் சேலம் மாவட்டங்களில் சுதந்திர போராட்ட இயக்கத் தில் தீவிரமாக பங்கேற்றவர்களில் கோவை கண்ணா குட்டி,  எஸ்.கிருஷ்ணன், சி.ஏ.பாலன், எம்.ஜோதிநாத், எம்.கோவிந் தன், எஸ்.என்.காளியண்ணன், பார்வதி கிருஷ்ணன், ஆரோக்கியசாமி, கே.என்.சின்னையன், திருப்பூர் கணபதி,  பொள்ளாச்சி சி.பா.கந்தசாமி, கே.ராமநாதன், என்.பழனிச் சாமி, ஈரோடு பி.எம்.சுப்பிரமணியம், கே.சி.எச்.அருணாச் சலம், பாடகர் கோவை ராமதாஸ், சேலத்தில் பி.பார்த்தசாரதி, டாக்டர் தெய்வம், ராமகிரி தாமோதரன், தாமோதரன் மற்றும் உத்தமலிங்கம் ஆகியோரும் அடங்குவர். 1946 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. சென்னை மாகாணத்தில் டி.பிரகா சத்தை முதல்வராக அறிவித்து, காங்கிரஸ் அமைச்சரவை பதவியேற்றது. அது செய்த முதல் காரியம் கம்யூனிஸ்ட் கட்சியை ஒழிக்கும் பொருட்டு 1947 பிப்ரவரி மாதம் 23ஆம்  தேதி அன்று நள்ளிரவில் ஒரு அவசர சட்டத்தை பிறப்பித்து, 

கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்களை கைது செய்தது. கோவை, சேலம் மாவட்டங்களில் திருப்பூர் பி.ராமசாமி, சேலம் கே.செல்வ ராஜ், பேராசிரியர் சி.சாமுவேல், டாக்டர் அண்ணாஜி, சேலம் தாமோதரன், சேலம் அர்த்தனாரி, எஸ்.எம்.ராமையா, கோவை  சி.குப்புசாமி, ஆர்.கே.பாண்டுரங்கன், மதுக் கரை ராமசாமி, எம்.கே.சாமி, கேடி ராஜு, ஜே.பி.புருஷோத்தமன் போன்றோரை கைது செய்தது.  இவர்கள் மீதான குற்றச்சாட்டு என் பது, மாணவர்களின் சுதந்திரத்தை பறிக் கும் அரசாங்கத்தின் அடக்குமுறைகளை கண்டித்தது, கடற்படை மாலுமிகளுக்கு  ஆதரவாக ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய் தது. யுத்தம் வெடித்த பின்பு கோவை  தொழிலாளிகளை பஞ்சப்படிக் கோரி  கிளர்ச்சி செய்யும்படிதூண்டினார்கள்  என்பது இவர்கள் முன்வைத்த குற்றச்சாட்டு கள். இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு கம்யூ னிஸ்ட்கள்  கொடுத்த ஒரே பதில் நாங்கள்  செய்த குற்றங்கள் இவைதான் என்றால்,  அவைகளை நினைத்து நாங்கள் பெருமைப் படுகிறோம் என்றனர். கைதான கம்யூனிஸ்டு கள் அனைவரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி நாடு  விடுதலை பெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பு விடுதலை செய்யப்பட்டனர். சுதந்திர போரில் கம்யூனிஸ்டுகள் செய்த தியாகம் வேறு எவரின் தியாகத்திற்கும் குறைந்ததல்ல என்பதுதான் வரலாறு தரும் பாடம். -என்.ராமகிருஷ்ணன்