சேலம், ஜூலை 02- சேலம் கன்னங்குறிச்சி பகுதியில் 16 கோடி மதிப்புள்ள 7 ஏக்கர் நிலத்தை போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க சேலம் கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். சேலம் கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் முருகன். ஆட்டோ டிரைவ ரான இவர் தனது உறவினர்களுடன் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித் தார். இதுகுறித்து முருகன் கூறுகையில், எங்கள் தாத்தாவிற்கு சொந்தமான சுமார் 2. 2 ஏக்கரும் பூர்வீக சொத்தான 4.8 ஏக்கர் நிலம் உள்ளது. இதனை பாகம் பிரிப்பதில் பிரச்சனை ஏற்பட்டது. அப் போது, தற்போது சேலம் மாநகர துணை மேயராக இருக்கும் சாரதா தேவியின் கணவர் மாணிக்கம் சரியாகப் பிரித்துக் கொடுப்பதாக கூறி சேலம் மாநகரின் கன்னங்குறிச்சி பகுதியில் உள்ள எங்க ளது 7 ஏக்கர் நிலத்தை ஏமாற்றி போலி ஆவணங்கள் தயாரித்து கிரையம் செய்து கொண்டார். இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த நாங்கள் இது குறித்து மாணிக்கத்திடம் கேட்டபோது தகாத வார்த்தைகள் பேசியும், நிலத்தை தர முடியாது எனக் கூறியும், மீறி தொந்தரவு செய்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார். இதனால் என்ன செய்வது என்று தெரியாத நிலையில் முதலமைச் சர் தனிப்பிரிவிற்கும், சேலம் நில அபக ரிப்பு தடுப்பு பிரிவுக்கும், காவல் நிலை யத்திலும் புகார் அளித்தோம். இது குறித்து எந்த வித நடவடிக்கையும் எடுக் கப்படாததால் தற்போது மாவட்ட ஆட்சி யரை சந்தித்து புகார் மனு அளித்துள் ளோம். எனவே 7 ஏக்கர் நிலத்தை மீட்டு நிலத்தை ஏமாற்றி மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எங் களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என தெரிவித்தார்.