districts

img

காலமானார்

கோவை, அக். 22 -  ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரி யர் நலச்சங்கத்தின் முன்னாள் மாவட்ட செயலாளர் தோழர் கே.ராமசாமி (76)  காலமானார். ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரி யர் நலச்சங்கத்தின் முன்னாள் மாவட்ட செயலாளரும், மார்க்சிஸ்ட் கட்சியின் தொண்டாமுத்தூர் ஒன்றியக்குழுவின் முன்னாள் உறுப்பி னரும், தமிழ்நாடு ஆரம்ப்பபள்ளி ஆசிரியர் கூட்டணி, தொண் டாமுத்தூர் வட்டார பொருப்பாளருமான மூத்த தோழர் கே.ராமசாமி தொண்டாமுத்தூர் முத்திபாளையத்தில் உள்ள  அவரது இல்லத்தில் காலமானார்.. மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் அரசு ஊழியர், ஆசிரியர் அமைப் புகள், விச, விதொச உள்ளிட்ட சங்கங்கள் அறைகூவல் விடும் அனைத்து விதமான போராட்டங்களில் முன்னிற்பவர். வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைபாடு காரணமாக அவதிப் பட்டு வந்தவர் சனியன்று காலமானார். இவருக்கு தெய் வானை என்கிற இணையரும், இரண்டு மகன்கள், ஒரு மகளும்  உள்ளனர்.  தோழர் கே.ராமசாமி அவர்களின் மறைவு செய்தி அறிந்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சி.பத்ம நாபன் உள்ளிட்ட கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் ஆறுச் சாமி, அஜய்குமார். கனகராஜ், யுகே.சிவஞானம், சிபிஎம் தொண்டாமுத்தூர் ஒன்றிய செயலாளர் வடவள்ளி மணி  மற்றும் ஆசிரியர், அரசு ஊழியர் சங்கங்களின் நிர்வாகிகள், ஓய்வூதியர் சங்கங்களின் நிர்வாகிகள் உள்ளிட்ட திரளா னோர் அவரது இல்லத்திற்கு சென்றும் அஞ்சலி செலுத்தி னர். இவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தனர். மறைந்த தோழர் கே.ராமசாமியின் இறுதி நிகழ்வு தொண்டா முத்தூர் மின்மயானத்தில் நடைபெற்றது.